பக்கம் எண் :

502கிட்கிந்தா காண்டம்

தோள்களையுடைய பெரிய வானர சேனை;மொய்ப்ப -தன்னை நெருங்கி
வர;கடல் என நடந்தான் -கடல் போன்ற தோற்றத்தோடு வந்தான்.

     சேனையோடு வந்த கேசரிக்கு அலையோடு கூடிய கடல்
உவமையாயிற்று.  அனுமன், தன் செயலால் மிகப் புகழ் பெற்றானாதலால்
அவனை 'இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பன்' என்றார்.
சீர்த்தி நம்பன்; புகழ் உருவாகிய அனுமன். நம்பன்: எல்லாரும் விரும்பும்
குணமுடையவன்.  நம்பன் : சிவன் என்னும் பொருளும் உண்டு; சிவபெருமான்
அம்சமாகப் பிறந்தவன் எனவும் கொள்ளலாம்.                         5

4412. மண் கொள் வாள் எயிற்று
      ஏனத்தின் வலியின, வயிரத்
திண் கொள் மால் வரை
      மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண் கொள் ஆயிர
      கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, -
      எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான்.

     எறுழ் வலித் தூமிரன் -மிக்க வலிமையுடைய தூமிரன் என்பவன்;
மண்கொள் வாள் எயிறு -
பூமியைக் குத்தியெடுத்த ஒளியமைந்த
பற்களையுடைய;ஏனத்தின் வலியின -(திருமாலின் அவதாரமான) வராகம்
(பன்றி) போன்ற வன்மை பெற்றனவாகி;வயிரத் திண் கொள் -உறுதியான
வலிமை கொண்ட;மால் வரை -பெரிய மலையும்;மயிர்ப் புறத்தன எனத்
திரண்ட -
ஒரு மயிர்க் காலிலேயடங்கக் கூடுமென்று சொல்லும்படி உருண்டு
பருத்த உருவம் கொண்டனவும்;கண் கொள் ஆயிர கோடியின்
இரட்டியில்-
இடம் மிகுதியாகக் கொண்ட இரண்டாயிரங் கோடியாக;
கணித்த -கணக்கிடப்பட்டவையுமாகிய;எண்கின் ஈட்டம் கொண்டு -
கரடிக்கூட்டத்தை உடன் கொண்டு;இறுத்தான் -வந்து சேர்ந்தான்.

     தூமிரன்: சாம்பவானுக்கு உடன் பிறந்தவன்; ஒரு கரடித் தலைவன்.
இவனது கரடிப் படையில் ஒவ்வொரு கரடியும் திருமாலின் வராகம்போன்று
வலிமையையும், ஒரு மயிர்க் காலில் பெருமலையும் அடங்கக் கூடிய
பேருருவத்தையும் உடையன என்பது.                               6

4413.முனியும்ஆம் எனின்அருக்கனை
      முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும்
     சலம் வரின் குமைக்கும்,
இனிய மாக் குருங்கு ஈர் -
      இரண்டு ஆயிர கோடி