தரீமுகன்: குகை போன்ற முகத்தையுடையவன் என்பது பொருள். வேகரம்: கொடுமை, உக்கிரம், சேனைக்குச் சாகரம் பரப்பும் பெருமையும் கொந்தளிப்பும் பற்றி வந்த உவமை. 10 4417. | இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க, முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும், விளைத்த வெஞ் சினத்து, அரிஇனம் வெருவுற விழிக்கும் அளக்கரோடும், - அக்கயன் எனும் பெயரன் - வந்து அடைந்தான். |
அக்கயன் எனும் பெயரன் -அக்கயன் என்னும் பெயரையுடைய வீரனும்;வேறு ஒரு மாநிலம் -(தாம் தங்குவதற்க இந்த நிலவுலகம் போதாமையால்) வேறொரு அகன்ற பூமி;வேண்டும் என்று -வேண்டும் என்று;இளைத்து இரங்க முளைத்த -வருந்தி மனம் இரங்கும்படி தோன்றினவும்;முப்பதினாயிர கோடியின் -முப்பதினாயிரங் கோடி என்ற தொகை கொண்டு;முற்றும் விளைத்த -உலகமெங்கும் பரவி யனவுமான; வெம் சினத்து அரி இனம் -கடுமையான கோபமுடைய சிங்கக் கூட்டங்களும்;வெருவுற விழிக்கும் -அஞ்சுமாறு நோக்குகின்ற; அளக்கரோடும் -வானர சேனைக் கடலோடும்;வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான். ஒவ்வொன்றும் மிகவும் பருத்திருப்பதால் அக்கயனது முப்பதினாயிரங் கோடிச் சேனை தங்குவதற்கு இந்த உலகம் போதாதென்பது கருத்து. அளக்கர்: கடல். சேனைக்கு உவமையாகுபெயர். 11 4418. | ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த பாயிரப் பெரும படை கொண்டு, பரவையின் திரையின் தாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும், - வந்து இறுத்தான். |
தட நெடு வரையை ஏய் -பெரிய உயர்ந்த மலையை ஒத்த;உருப் புயம் -வடிவத்தோடு கூடிய தோள்களையுடை;சாம்பன் என்பவனும் - சாம்பவானும்;பரவையின் திரையின் தாய் -கடலின் அலைகளைப் போலப் பாய்ந்து;உருத்து -வெகுண்டு;உடனே வர -பின்னே தொடர்ந்து வர; ஆயிரத்து அறுநூறு கோடியின் -ஆயிரத்து |