| உயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே, - சயம்தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த மயிந்தன் - மல் கசகோமுகன்தன்னொடும், வந்தான். * |
சயம் தனக்கு ஒரு வடிவென -வெற்றியே ஓர் உருக் கொண்டது என்று கூறும்படி;திறல் கொடு தழைக்க -போர் வன்மையால் உயர்ந்த; மயிந்தன் -மயிந்தன் என்னும் வீரன்;மல் கச கோமுகன் தன்னொடும் - மற்போரில் சிறந்த கச கோமுகன் என்பவனோடும்;இயைந்த பத்து நூறாயிரம் பத்து எனும் கோடி -பொருந்திய நூறு லட்சங் கோடி என்ற எண்ணுள்ள;உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் -மிகக் கொடிய சினத்தையுடைய வானர சேனையோடும்;ஒருங்கே வந்தான் -ஒரு சேர வந்தான். மயிந்தனும் கசகோமுகனும் நூறு லட்சங் கோடி சேனையுடன் வந்தார்கள் என்பது. மயிந்தனும் துமிந்தனும் அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த வானரராவர். 14 4421. | கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த நீடு வெஞ் சினத்து அரிஇனம் இரு புடை நெருங்க, மூடும் உம்பரும், இம்பரும், பூமியில் மூழ்க, - தோடு இவர்ந்த தார்க்கிரி புரை துமிந்தனும் - தொடர்ந்தான். |
தோடு இவர்ந்த தார்க்கிரி புரை -இதழ்கள் அமைந்த மலர் மாலையை அணிந்தவனும் மலையை ஒத்தவனுமான;துமிந்தன் -துமிந்தன் என்னும் வீரனும்;கோடி கோடி நூறு ஆயிரம் எண் எனக் குவிந்த -பல கோடி இலட்சக் கணக்காக நிறைந்த;நீடு வெஞ்சினத்து அரி இனம் -மிகக் கொடிய கோபத்தையுடைய வானரக் கூட்டம்;இரு புடை நெருங்க -இரு பக்கங்களிலும் நெருங்கி வரவும்;மூடும் உம்பரும் -பூமியின்மேல் கவிந்த ஆகாயமும்; இம்பரும் பூமியில் மூழ்க -இவ் வுலகமும் (அச்சேனைகள் வரும் போது எழும்) புழுதியில் மறைந்து விடவும்;தொடர்ந்தான் -பின் வந்தான். வீடணன் இராமனிடம் சரண்புக வருகையில் அவனை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள் இவ்விருவருமேயாவர். 15 |