முறையாகத் தெரியும்படி (அவனுக்குக்) காண்பித்து;ஆண்டு இருந்தனன் - அந்த இடத்தில் இருந்தான் (அப்போது);ஈண்டு சேனை -திரண்ட அந்த வானர சேனையானது;எறி பாற் கடல் -அலை வீசுகின்ற பாற்கடல்;நெறி படர்ந்து என்ன -வழியில் சென்றது போல;ஆர்த்து உருத்து எழுந்தது - பேராரவாரம் செய்து (பிறர்க்கு) அச்சம் உண்டாகப் புறப்பட்டது. சுக்கிரீவன் வானரப் படைகளன் வரலாறுகளை இராமனுக்குச் செம்மையாக விளங்கச் சொன்னான் என்பது. வானரப் படைக்குப் பாற்கடல் உவமை: நிறத்தாலும் ஆரவாரத்தாலும் பாற்கடல் அலைகள் வானர சேனைக்கு உவமையாயின. ஐயரவர்கள் நூலகப் பதிப்பில் இப்பாடல் இடம் பெறவில்லை. 31 வானரப் படையின் பெருக்கம் 4438. | எட்டுத் திக்கையும், இரு நிலப்பரப்பையும், இமையோர் வட்ட விண்ணையும், மறி கடல் அனைத்தையும், மறையத் தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூமி, அட்டிச் செம்மிய நிறை குடம் ஒத்தது, இவ் அண்டம். |
எட்டுத் திக்கையும் -எட்டுத் திசைகளையும்;இரு நிலப் பரப்பையும்-பெரிய பூமியின் விரிந்த இடம் முழுவதையும்;இமையோர் வட்டவிண்ணையும் -தேவர்கள் வாழ்கின்ற வட்டவடிவமான மேலுலகத் தையும்;மறிகடல் அனைத்தையும் -அலைகள் வீசும் ஏழு கடல்களையும்; மறைய- மறையும்படி;தொட்டு மேல் எழுந்து ஓங்கிய -தரையிலிருந்து மெலெழுந்து பரந்த;தூளியின் -(படைகளின்) புழுதியால்;இவ் அண்டம் - இந்த அண்ட கோளமானது;பூழி அட்டிச் செம்மிய -புழுதியை இட்டு மூடிய;நிறை குடம் ஒத்தது -நிறை குடத்தை ஒத்திருந்தது. புழுதியால் நிறைந்த நிறைகுடத்தைத் தூளியால் நிரம்பிய அண்ட கோளத்திற்கு உவமையாக்கினார். தன்மைத் தற்குறிப்பேற்றவுவமையணி. 32 4439. | அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்; வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ? |
|