பக்கம் எண் :

518கிட்கிந்தா காண்டம்

 பத்து இரட்டி நன் பகல்
     இரவு ஒருவலர் பார்ப்பர்,
எத் திறத்தினூம் நடுவு
      கண்டிலர், முடிவு எவனோ?

     அத்தி ஒப்பு எனின் -(இச் சேனைத் தொகுதிக்கு) கடல் நிகராகு
மென்று கூறினால்;அன்னவை உணர்ந்தவர் உளர் -அக் கடல்களின்
அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள் (இச் சேனையின் பரப் பைக்
கண்டவர்கள் இல்லை);இனி வித்தகர்க்கு -இனிமேல் அறிவு டையவரால்;
உரைக்கல் ஆம் உவமை -
(இச் சேனைக்கு) எடுத்துக் கூறும் உவமை;
வேறு யாதோ -
வேறு யாது உள்ளது (எதுவுமில்லை); பத்து இரட்டி
நன்பகல் இரவு -
இருபது நாட்கள் பகலிலும் இரவிலும்;ஒருவலர்
பார்ப்பார்-
இடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர்;எத்
திறத்தினும் -
எவ்வகையாலும்;நடுவு கண்டிலர் -(இச் சேனையின்)
நடுவையும்காணாதவராயினர்;முடிவு எவனோ -(அவ்வாறானால்) இதன்
முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ?

     அறிவாளிகளான இராமஇலக்குவர் இருபது நாள் அல்லும் பகலும் இடை
விடாமல் பார்த்து இச் சேனையின் நடுவெல்லைக் கூடக் காணாதவராயினர்.
அப்படியிருக்க, இனி இதன் முடிவெல்லையை யாரால் காண முடியும்
என்றவாறு. அத்தி - கடல்.                                      33

படையைக் குறித்து இராமலக்குவர் உரையாடல்

4440.விண்ணின் தீம்புனல் உலகத்தின்,
     நாகரின், வெற்றி
எண்ணின், தன் அலது ஒப்பு இலன்
      என நின்ற இராமன்,
கண்ணின், சிந்தையின், கல்வியின்,
      ஞானத்தின், கருதி,
அண்ணல் - தம்பியை நோக்கினன்,
      உரைசெய்வதானான்:

     வெற்றி எண்ணில் -வெற்றி பெறுவதைப் பற்றி ஆராய்ந்தால்;தான்
அலது -
தானே தனக்கு உவமையாவது அல்லாமல்;விண்ணில் -
மேலுலகத்திலும்;தீம்புனல் உலகத்தில் -இனிய கடல் சூழ்ந்த உலகத்திலும்;
நாகரின் -
நாகர்கள் வாழும் பாதாள உலகத்திலும்;ஒப்பு இலன் என -
உவமையில்லாதவன் எனச் சொல்லுமாறு;நின்ற இராமன் -(சிறப்போடு)
விளங்கும் இராமன்;கண்ணின் -தன் கண்களாலும்;சிந்தையின் -
மனத்தினாலும்;கருதி -அந்தச் சேனைப் பாப்பை நன்றாக ஆராய்ந்து;
அண்ணல் தம்பியை நோக்கினன் -