பக்கம் எண் :

தானை காண் படலம் 521

கூற);இளையவன் -இலக்குவன்;வீரனைக் கை தொழுது இயம்பும் -
இராமனை வணங்கிக் கூறலானான்.

     தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால்
(7382) என்றும் கும்பகருணனின் உருவத் தோற்றம் வருணிக்கப்பட்டதை இங்கு
ஒப்பிட்டுணரலாம்.                                              37

4444.'யாவது எவ் உலகத்தினின்,
      இங்கு, இவர்க்கு இயற்றல்-
ஆவது ஆகுவது; அரியது ஒன்று
     உளது எனல் ஆமே? -
தேவ! - தேவியைத் தேடுவது
      என்பது சிறிதால்;
பாவம் தோற்றது, தருமமே
      வென்றது, இப்படையால்.

     தேவ -தேவனே!இங்கு இவர்க்கு -இங்குள்ள வானர வீரர்களுக்கு;
எவ் உலகத்தினின் -
எந்த உலகத்தில்;யாவது இயற்றல் ஆவது -எதைச்
செய்து முடிக்கவேண்டியதிருந்தாலும்;ஆகுவது ஆவது -அச்செயல்கள்
எளிதில் கைகூடிவிடும்;அரியது ஒன்று -(அவ்வாறாக இவர்களுக்குச்
செய்வதற்கு) அரிய செயல்;உளது எனல் ஆமே -உள்ளது என்று
சொல்வதற்கு இடமுண்டோ? தேவியைத் தேடுவது என்பது -சீதையைத்
தேடிக் கண்டு பிடிப்பதென்பது;சிறிது -(இவர் களது பேராற்றலுக்கு) மிகவும்
எளிதான செயலாகும்;இப்படையால் -இந்தச் சேனையால்;பாவம்
தோற்றது-
பாவம் தோல்வியடைந்தது;தருமமே வென்றது -தருமமே
வெற்றிபெற்றது.

     எந்த உலகத்தில் எச் செயல் செய்யவேண்டுமானாலும் இவர்களுக்கு
எளிதில் செய்ய முடியுமென்பது.  நல்லறத்தின் வழி நிற்கும் நமக்கு இச்
சேனை கிடைத்தது பாவம் அழிவதற்கும் தருமம் தழைப்பதற்கும் ஓர் அறிகுறி
என்றான் இலக்குவன்.                                          38

4445.'தரங்க நீர் எழு
      தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர்
      உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால் வரை
      உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு,
      உறையிடப் படைத்தனன்கொல்லாம்?

     தரங்க நீர் எழு -அலைகள வீசும் நீரில் முளைக்கும் இயல்புள்ள;
தாமரை நான்முகன் -
தாமரை மலரின் உதித்த பிரமன்;தந்த -