படைத்த;வரம் கொள் -மேன்மையைப் பெற்ற;பேர் உலகத்தினில் -இப் பெரிய உலகத்திலுள்ள;மற்றை மன் உயிர்கள் -நிலை பெற்ற மற்றைய உயிரினங்களை;உயிர் படைத்து எழுந்தன -உயிர் பெற்று வந்தனவாகிய; உரம் கொள் -வலிமை கொண்ட;மால் வரை ஒக்கும் .பெரிய மலைகளைப் போன்ற;குரங்கின் மா படைக்கு -இந்தப் பெரிய வானர சேனைக்கு;உறை இட -உறையிட்டுக் கணக்கிடுவதற்காகவே;படைத்தனன் கொல் -படைத்தான் போலும். பிற உயிர்களெல்லாம் இச் சேனையிலுள்ள வானரத் தொகைக்கு உறையிடு வதற்கென்றே படைக்கப்பட்டனபோலும் என்பது. உறை: பெரிய எண்ணைக் குறிப்பிட அடையாளமாக வைக்கும் சிறு பொருள். 'அலருளோன் ஆதியாக ஒழிந்த வேறு உயிர்களெல்லாம் அரக்கருக்கு உறையும் போதா' (4868) 'உறையிடவும் போதார்' - (5344) என்ற இடங்களிலும் இக்கருத்து வந்துளது. 39 4446. | 'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி - எண் திசை மருங்கும், தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்? நீண்ட நூல்வலாய்!' என்றனன், இளையவன்; நெடியோன், பூண்ட தேரவன் காதலற்கு, ஒரு மொழி புகலும்: |
நீண்ட நூல் வலாய் -பெருமை வாய்ந்த நூல்களில் வல்லவனே; எண்திசை மருங்கும் -எட்டுத் திசைகளினிடங்களிளெல்லாம்;தேண்டு வார்களை -(சீதையைத்) தேடுவதற்கு உரியவர்களை;வல்லையில் செலுத்துவது அல்லால் -விரைவாக அனுப்புவதல்லாமல்;இனி ஈண்டுத் தாழ்க்கின்றது என் -இனிமேலும் இங்கிருந்து காலதாமதம் செய்வது எதற்காக? என்றனன் இளையவன் -என்று இலக்குவன் கூறினான். நெடியோன் -பெருமை மிக்கவனான இராமன்;பூண்ட தேரவன் காதலற்கு- ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரையுடையவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு;ஒரு மொழிபுகலும் -ஒரு வார்த்தைசொல்லலானான். 40 |