பக்கம் எண் :

522கிட்கிந்தா காண்டம்

படைத்த;வரம் கொள் -மேன்மையைப் பெற்ற;பேர் உலகத்தினில் -இப்
பெரிய உலகத்திலுள்ள;மற்றை மன் உயிர்கள் -நிலை பெற்ற மற்றைய
உயிரினங்களை;உயிர் படைத்து எழுந்தன -உயிர் பெற்று வந்தனவாகிய;
உரம் கொள் -
வலிமை கொண்ட;மால் வரை ஒக்கும் .பெரிய
மலைகளைப் போன்ற;குரங்கின் மா படைக்கு -இந்தப் பெரிய வானர
சேனைக்கு;உறை இட -உறையிட்டுக் கணக்கிடுவதற்காகவே;படைத்தனன்
கொல் -
படைத்தான் போலும்.

     பிற உயிர்களெல்லாம் இச் சேனையிலுள்ள வானரத் தொகைக்கு
உறையிடு வதற்கென்றே படைக்கப்பட்டனபோலும் என்பது.

     உறை: பெரிய எண்ணைக் குறிப்பிட அடையாளமாக வைக்கும் சிறு
பொருள்.

     'அலருளோன் ஆதியாக ஒழிந்த வேறு உயிர்களெல்லாம் அரக்கருக்கு
உறையும் போதா' (4868) 'உறையிடவும் போதார்' - (5344) என்ற இடங்களிலும்
இக்கருத்து வந்துளது.                                             39

4446.'ஈண்டு, தாழ்க்கின்றது என், இனி -
      எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில்
     செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்!' என்றனன்,
      இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு,
      ஒரு மொழி புகலும்:

     நீண்ட நூல் வலாய் -பெருமை வாய்ந்த நூல்களில் வல்லவனே;
எண்திசை மருங்கும் -
எட்டுத் திசைகளினிடங்களிளெல்லாம்;தேண்டு
வார்களை -
(சீதையைத்) தேடுவதற்கு உரியவர்களை;வல்லையில்
செலுத்துவது அல்லால் -
விரைவாக அனுப்புவதல்லாமல்;இனி ஈண்டுத்
தாழ்க்கின்றது என் -
இனிமேலும் இங்கிருந்து காலதாமதம் செய்வது
எதற்காக? என்றனன் இளையவன் -என்று இலக்குவன் கூறினான்.
நெடியோன் -பெருமை மிக்கவனான இராமன்;பூண்ட தேரவன் காதலற்கு-
ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரையுடையவனான சூரியன் மகனாகிய
சுக்கிரீவனுக்கு;ஒரு மொழிபுகலும் -ஒரு வார்த்தைசொல்லலானான்.   40