தலைவன் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுதலன்றி வேறு ஆய்வு மேற் கொள்ளுதல் படைவீரர்களுக்கு இல்லை என்ற கருத்தினை 'வகை. . . இன்றி' என்ற தொடர்பு புலப்படுத்திற்று. வகையும் மானமும் பகையும் இன்றி எனக் கூட்டிப் பொருள் கொள்க. வகைதல் - ஆராய்தல். 'நகர் நீ தவிர்வாய்' எனவும் வகையாது தொடர்ந்து' என்ற தொடரில் 'வகையாது' என்ற சொல் 'ஆராயாமல்' என்ற பொருளில் வந்தது. மானம் - ஒப்புமை. வகையும் மானமும் பகையும் என்ற எண் ணும்மைச் சொற்கள் 'இன்றி' என்னும் வினையெச்சம் கொண்டு முடிவதாகப் பாடல் அமைந்துள்ளதுகாண்க. 1 4448. | ' ''ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'' என்று ஆற்றலாளர் அறிவின் அமைந்தது ஓர் மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றும் ஓர் தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? |
(அதுகேட்ட சுக்கிரீவன் இராமனை நோக்கி);ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று -(இந்த வானர சேனையின் அளவு) எழுபது வெள்ளம் என்னும் அளவால் அமைந்திருக்கின்றது என்று;ஆற்றலாளர் அறிவின் அமைந்தது -வல்லவருடைய அறிவினால் ஆராய்ந்து கண்ட தாகிய;ஓர் மாற்றம் உண்டு -ஒரு வார்த்தை உள்ளது;அது அல்லது - (அந்த வார்த்தை) அல்லாமல்;இதற்கு -இச் சேனைக்கு;மற்றும் ஓர் தோற்றம் என்று -வேறான ஒரு முடிவெல்லையுண்டு என்று;எண்ணி முன் சொல்லுமோ -ஆராய்ந்து சொல்ல இயலுமோ? (இயலாது). இச் சேனையின் தொகுதி பற்றி்ப் பெரியோர் எழுபது வெள்ளம் என்று கூறியதை உடன்படிவேண்டும்; மாறாக யாராலும் இவ்வளவென்று கணக்கிட்டுக் கூறுவது எவ்வாற்றாலும் இயலாது என்க. 2 4449. | 'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு ஏறு கொற்றத் தலைவர், இவர்க்கு முன் கூறு சேனைப் பதி, கொடுங் கூற்றையும் நீறு செய்திடும் நீலன்' என்று ஓதினான். |
அனீகருக்கு -இச் சேனையிலுள்ள வானரங்களுக்கு;ஏறு கொற்றத் தலைவர் -சிறந்த வெற்றியையுடைய தலைவர்கள்;ஆறு பத்து எழு கோடி-அறுபத்தேழு கோடிக் கணக்கான;இவர்க்கு முன் கூறு சேனைப்பதி -இப் படைத் தலைவர்களுக்கும் முதலாகச் சொல்லப்பட்ட தலைமைப் படைத்தலைவனானவன்;கொடுங் கூற்றையும் -கொடிய யமனையும்;நீறுசெய்திடும் நீலன் -சாம்பலாக்கவல்ல வலிமையுள்ள |