பக்கம் எண் :

நாட விட்ட படலம் 525

நீலனாவன்;என்று ஓதினான் -என்று சுக்கிரீவன் கூறினான்.

     எழுபது வெள்ளம் வானர வீரர்களுக்கு அறுபத்தேழு கோடி சேனைத்
தலைவர் உள்ளனர்; அந்தப் படைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் நீலன்
என்பது.  கொல்லுதல் தொழிலமைந்த யமனையே கொல்லும் திறம் வாய்ந்த
வானென நீலனது சிறப்பு கூறப்பெற்றுள்ளது.  அனீகம் - சேனை வகுப்பு;
அனீகர் - சேனையிலுள்ளவர்.                                      3

நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என இராமன் கூறுதல்

4450. எனது உரைத்த
      எரிகதிர் மைந்தனை,
வென்றி விற் கை
      இராமன் விருப்பினால்,
'நின்று இனிப் பல
      பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை
      செய்க' என்றான்.

     என்று உரைத்த -என்று கூறிய;எரி கதிர் மைந்தனை -வெப்ப
மான கதிர்களையுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை;வென்றி விற்கை
இராமன் -
வெற்றியைத் தரும் கோதண்டம் என்னும் வில்லைத் தாங்கிய
இராமன்;விருப்பினால் -அன்புடன் (நோக்கி);இனி நின்று பல பேசி
என்னோ -
இப்பொழுது (வீணே காலங் கழியுமாறு) பலபடப் பேசுவதால்
வரும் பயன் யாது? நெறி சென்று இழைப்பன -முறையாகச் செயலாற்றும்
வழியை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து;சிந்தனை செய்க -
ஆலோசைை செய்க;என்றான் -என்று சொன்னான்.

     வென்றி விற்கை இராமன்: எப்பொழுதும் வெற்றியே அல்லாமல்
தோல்வியையறியாத கோதண்டத்தை ஏந்தியவன்.  எரிகதிர் - வினைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.  சூரியனைக் குறித்து
நின்றது.                                                       4

சுக்கிரீவன், அனுமனை அங்கதன் முதலிவர்களுடன்
தென்திசைக்கு அனுப்புதல்

4451. அவனும் - அண்ணல் அனுமனை, 'ஐய! நீ,
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ?

     அவனும் -அந்தச் சுக்கிரீவனும்;அண்ணல் அனுமனை -
பெருமையில் சிறந்த அனுமனை (நோக்கி);ஐய -ஐயனே!நீ -, புவனம்
மூன்றும் -
மூவலகத்திலும்;நின் தாதையின் -உன் தந்தையாகிய