நீலனாவன்;என்று ஓதினான் -என்று சுக்கிரீவன் கூறினான். எழுபது வெள்ளம் வானர வீரர்களுக்கு அறுபத்தேழு கோடி சேனைத் தலைவர் உள்ளனர்; அந்தப் படைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் நீலன் என்பது. கொல்லுதல் தொழிலமைந்த யமனையே கொல்லும் திறம் வாய்ந்த வானென நீலனது சிறப்பு கூறப்பெற்றுள்ளது. அனீகம் - சேனை வகுப்பு; அனீகர் - சேனையிலுள்ளவர். 3 நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என இராமன் கூறுதல் 4450. | எனது உரைத்த எரிகதிர் மைந்தனை, வென்றி விற் கை இராமன் விருப்பினால், 'நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி சென்று இழைப்பன சிந்தனை செய்க' என்றான். |
என்று உரைத்த -என்று கூறிய;எரி கதிர் மைந்தனை -வெப்ப மான கதிர்களையுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை;வென்றி விற்கை இராமன் -வெற்றியைத் தரும் கோதண்டம் என்னும் வில்லைத் தாங்கிய இராமன்;விருப்பினால் -அன்புடன் (நோக்கி);இனி நின்று பல பேசி என்னோ -இப்பொழுது (வீணே காலங் கழியுமாறு) பலபடப் பேசுவதால் வரும் பயன் யாது? நெறி சென்று இழைப்பன -முறையாகச் செயலாற்றும் வழியை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து;சிந்தனை செய்க - ஆலோசைை செய்க;என்றான் -என்று சொன்னான். வென்றி விற்கை இராமன்: எப்பொழுதும் வெற்றியே அல்லாமல் தோல்வியையறியாத கோதண்டத்தை ஏந்தியவன். எரிகதிர் - வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. சூரியனைக் குறித்து நின்றது. 4 சுக்கிரீவன், அனுமனை அங்கதன் முதலிவர்களுடன் தென்திசைக்கு அனுப்புதல் 4451. | அவனும் - அண்ணல் அனுமனை, 'ஐய! நீ, புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் தவன வேகத்தை ஓர்கிலை; தாழ்த்தனை; கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? |
அவனும் -அந்தச் சுக்கிரீவனும்;அண்ணல் அனுமனை - பெருமையில் சிறந்த அனுமனை (நோக்கி);ஐய -ஐயனே!நீ -, புவனம் மூன்றும் -மூவலகத்திலும்;நின் தாதையின் -உன் தந்தையாகிய |