இவ்வாறு உணர்த்துகின்றது;மாருதி -அனுமானே!இனி வன திசைக்கு - இப்போது வலிய அந்தத் திசைக்குச் (சென்று);வென்று -அங்குள்ள அரக்கரை வெற்றி கொண்டு;இசைக்கு உரியார் -புகழ் பெறத் தகுதியுள்ளவர்;நீ அலால் பிறர் வேண்டுமோ -நீ ஒருவனே யல்லாமல் வேறொருவரும் வேண்டுமோ? 'இராவணன் நகராகிய இலங்கை தென் திசையிலிருப்பதாக எனக்கு நினைவு; நீ ஒருவனே அத் தென்திசைக்குச் சென்று இராவணனது இலங்கையைக் கண்டு அங்குள்ள அரக்கரை வென்று சீதையின் செய்தியை அறிந்து வந்து சொல்லிப் புகழ் பெறுவதற்குத் தகுதியுடையாய்' என்று சுக்கிரீவன் அனுமனிடம் கூறினான். இன்னணம் - (இன்னவண்ணம்) தொகுத்தல் விகாரம். எல்லாவுயிர்களையும் கவரும் யமன் திசையானதாலும், வீரம் மிக்க இராவணன் அங்கு ஆட்சி புரிவதாலும் தென்திசை வன்திசைஎனப்பட்டது. 7 4454. | 'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது, தெள்ளியோய்! ''அது தென் திசை என்பது ஓர் உள்ளமும் எனக்கு உண்டு'' என உன்னுவாய். |
தெள்ளியோய் -தெளிவான அறிவுள்ளவனே! வள்ளல் தேவியை - சிறந்த கொடியாளனான இராமனின் மனைவியாகிய சீதையை;வஞ்சித்து வௌவிய -வஞ்சனையால் கவர்ந்து சென்ற;கள்ள வாள் அரக்கன் - கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்;செலக் கண்டது அது -போகக் கண்டதான அந்தத் திசை;தென்திசை என்பது -தெற்குத் திக்காகும் என்பதாகிய;ஓர் உள்ளமும் -ஒரு நினைவும்;எனக்கு உண்டு - என்னிடம் தோன்றுகிறது;என உன்னுவாய் -என்று நீ கருதுவாய். கண்டது - சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக் கண்டது. 8 4455. | 'தாரை மைந்தனும், சாம்பனும், தாம் முதல் வீரர் யாவரும், மேம்படும் மேன்மையால் சேர்க நின்னொடும்; திண் திறல் சேனையும், பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். |
தாரை மைந்தனும் -தாரையின் மகனான அங்கதனும்;சாம்பனும் - (கரடிகளுக்கு அரசனான) சாம்பவானும்;முதல் வீரர் யாவரும் - |