முதலாகிய வீரர் பலரும்;மேம்படும் மேன்மையால் -மிகுந்த பெருமையோடு;நின்னொடும் சேர்க -உன்னுடன் வரட்டும்;வெள்ளம் இரண்டொடும் -இரண்டு வெள்ளம் என்னும் அளவுடனே;திண் திறல் சேனைகள் -மிக்க வலிமையுள்ள சேனைகள்;பெற்றியால் பேர்க - பெருமையோடு (உங்களுக்கு உதவியாகப்) புறப்படட்டும் (எனக்கூறி) அங்கதன், சாம்பவான் ஆகியோரோடும், இரண்டு, வெள்ளம் வானர சேனையோடும் புறப்பட்டுச் சீதையைத் தேட நீ தென்திசை செல்வாயெனச் சுக்கிரீவன் அனுமனுக்கு ஆணையிட்டான் என்பது. திண்திறல்: ஒரு பொருட்பன் மொழி. தாம் - அசை. 9 ஏனைத் திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புதல் 4456. | 'குட திசைக்கண், சுடேணன்; குபேரன் வாழ் வட திசைக்கண், சதவலி; வாசவன் மிடல் திசைக்கண், வினதன்; விறல் தரு படையொடு உற்றுப் படர்க' எனப் பன்னினான். |
குடதிசைக் கண் -மேற்குத் திசையில்;சுடேணன் -இடபனும்; குபேரன் வாழ் வடதிசைக்கண் -(திக்குப் பாலகனான) குபேரன் வாழுகின்ற வடக்குத் திசையில்;சதவலி -சதவலி என்னும் தலைவ னும்;மிடல் வாசவன் திசைக்கண் -வலிமைக்கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில்; வினதன் -வினதனும்;விறல்தரு படையொடு -வலிமை மிக்க சேனையோடு;உற்றுப் படர்க -சேர்ந்து செல்வாராக;எனப் பன்னினான் -என்று கூறினான். குபேரன்: விச்சிரவசு என்னும் முனிவனுக்கு மூத்த மனைவியான பரத்து வாச மகளிடம் பிறந்த மகனாவான். வாசவன்: வசுக்களுக்குத் தலைவன். படர்கென - (அகரம்) தொகுத்தல் விகாரம். (படர்க + என) 10 ஒரு திங்களுக்குள் தேடித் திரும்புமாறு சுக்கிரீவன் ஆணையிடல் 4457. | வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும் சுற்றி ஓடித் துருவி, ஒரு மதி முற்றுறாதமுன், முற்றுதிர், இவ் இடை; கொற்ற வாகையினீர்!' எனக் கூறினான். |
|