பக்கம் எண் :

நாட விட்ட படலம் 529

     (சுக்கிரீவன் இடபன் முதலான வானர வீரர்களை நோக்கிக்);கொற்ற
வாகையினீர் -
வெற்றிக்கான வாகைமாலையை அணிவதற்கு உரியவர்களே!
வெற்றி வானரம் வெள்ளம் இரண்டொடும் -
(நீங்கள்) வெற்றி பெறும்
தன்மையுள்ள இரண்டு வெள்ளம் வானர சேனையோடும்;சுற்றி ஓடித்துருவி -
(பல இடங்களில்) அலைந்து திரிந்து (சீதையைத்) தேடி;ஒரு மதி
முற்றுறாதமுன் -
ஒரு திங்கள் கழிவதற்குள்ளே;இவ் இடை முற்றுதிர் -
இங்கே திரும்பி வந்து சேருங்கள்;எனக் கூறினான் -எனச் சொல்லினான்.

     நீங்கள் தனித் தனியே இரண்டு வெள்ளம் வானரப் படையோடு நான்
உங்களுக்குக் குறித்த திசைகளுக்குச்  சென்று சீதையைத் தேடி ஒரு
திங்களுக்குள் இங்கு வந்து சேரவேண்டுமென்று சுக்கிரீவன் ஆணையிட்டான்
என்பது.  வாகை -ஆகுபெயர்.                                    11

தென்திசை செல்லும் வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுதல்

4458.'ஈண்டுநின்று எழுந்து, ஈர் - ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடு முடி தோன்றலால்,
நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
வேண்டும் விந்தமலையினை மேவுவீர்.

     (தென் திசைக்குச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன்);
ஈண்டு நின்று எழுந்து -
(நீங்கள்) இங்கிருந்து புறப்பட்டு;எழில் தூண்டு
சோதி -
அழகு மிகுந்து ஒளி வீசுகின்ற;ஈர் ஐந்து நூறு கொடு முடி
தோன்றலால் -
ஆயிரஞ் சிகரங்கள் காணப்படுவதால்;நீண்ட நேமி கொல்
ஆம் என -
பெரிய வடிவு கொண்ட திருமால்தானோ என்று;நேர்
தொழவேண்டும் -
எதிரே சென்று தொழுவதற்குரிய;விந்த மலையினை -
விந்திய மலையை;மேவுவீர் -முதலிலே சென்று சேருங்கள்.

     ஆயிரங் கொடுமுடிகளையுடைய விந்திய மலைக்கு ஆயிரம்
முடிகளையுடைய திருமாலை உவமையாக்கினார்.  நேமி - ஆகுபெயர்.    12

4459.'தேடி, அவ் வரை தீர்ந்த பின், தேவரும்
ஆடுகின்றது, அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது, பல் மணியால் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர்.

     அவ்வரை தேடித் தீர்ந்தபின் -அந்த விந்திய மலையில் சீதையைத்
தேடி முடித்த பின்பு;தேவரும் ஆடுகின்றது -தேவர்களும் வந்து நீராடப்
பெறுவதும்;அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது -(வெள்ளத்தால் அடித்து
வரப் பெற்ற மலர்களிலுள்ள தேனைப் பருகி அந்தக் களிப்பினால்) வண்டுகள்
பஞ்சமம் என்ற சுரத்தைப் பாடப் பெறுவதுமான;பல் மணியால் இருள்
ஓடுகின்ற -
(அங்குள்ள) பலவகையான