பூம்பொழில் -மலர்கள் நிறைந்த (முண்டகத்துறை என்னும்) அச் சோலையானது;ஞாலம் நுங்குறும் -உலகத்தவரால் அனுபவிக்கப் படுகிற; நல் அறத்தோர் பொருள் போல -சிறந்த தரும சிந்தையுள்ள வர்களின் செல்வம் போல;நின்று பொலிவது -நிலைபெற்று விளங்குவது;சீல மங்கையர் வாய் என -நல்லொழுக்கமுடைய மாதர்களின் வாயிதழ் போன்று; தீம் கனி -இனிய பழங்கள்;காலம் இன்றிக் கனிவது -(இன்ன காலமென்று இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது;காண்டிர் -(அதனைச்) சென்று காணுங்கள். இம் முண்டகத்துறைக் கண்ணுள்ள மரங்களெல்லாம் சிறந்த பயன்மரங்கள் என்பதும், எந்தக்காலத்தும் மாறாது இனிய கனி தருவன என்பதும் குறிக்கப் பெற்றன. ஞாலம் - இடவாகுபெயர். சிறந்த அறச் சிந்தனையுள்ளவர்களின் செல்வம் பெருகி உலகத்துள்ளார்க்கும் பயன்படும். கனிபோன்ற வாய் என்னாமல் மகளிர் வாய் போன்ற கனி என்றது எதிர்நிலையணி. 18 4465. | 'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி; அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி; சயன மாதர் கலவித்தலைத் தரும் பயனும், இன்பமும், நீரும், பயக்குமால். * |
(அங்குள்ளவர்கள்) நயனம் நன்கு இமையார் -கண்களை நன்றாக இமைக்கமாட்டார்கள்;நனி துயிலார் -நன்றாகத் தூங்கமாட்டார்கள்; அருக்கனுக்கு -சூரியனுக்கு;அவ் வழி அயனம் இல்லை -அவ்விடத் தில் நுழைவதற்குரிய வழி கிடையாது;சயனமாதர் கலவித் தலைதரும் பயனும் - படுக்கையில் மகளிரின் சேர்க்கையால் உண்டாகின்ற போக இன்பத்தையும்; இன்பமும் -பெருமகிழ்ச்சியையும்;நீரும் -நீர்ச் செழிப்பையும், பயக்கும் - (எப்பொழுதும்) உண்டாக்கும். ஆல்: அசை. கண்ணிமையாமையும், துயிலாமையும் தேவர்களுக்கு இயல்பு. தேவர்கள் வாழுமிடமாயுள்ளது அப்பொழில். அது சூரியனின் கதிர்களும் உட்புகாதவாறு மரங்களால் செறிந்துள்ளது. 19 4466. | ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத் தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும் ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது - பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். |
ஆண்டு இறந்தபின் -அந்தப் பொழிலைக் கடந்த பின்பு;அந்தரத்து இந்துவைத் தீண்டுகின்றது -ஆகாயத்தில் மதியைத் தொடுவதும்;செங் கதிர்ச் செல்வனும் -சிவந்த கிரணங்களைச் செல்வமாக வுடைய சூரியனும்; ஈண்டு உறைந்து அலது - இம் மலையில் தங்காமல்;ஏகலம் என்பது - அப்பால் செல்லமாட்டோம் என்று நினைத்தற்கு |