பக்கம் எண் :

நாட விட்ட படலம் 565

 பா வரும் கிழமைத் தொன்மைப்
      பருணிதர் தொடுத்த, பத்தி
நா அருங் கிளவிச் செவ்வி நடை
      வரும் நடையள் -
நல்லோய்!

     நல்லோய் -நற்பண்புகளால் சிறந்தவனே!பூ வரும் -தாமரைப் பூவில்
வாழும் தன்மையுள்ள;மழலை -மழலைச் சொற்களையுடைய;அன்னம் -
அன்னப் பறவையும்;புனை மடப் பிடி -அழகிய இளைய பெண் யானையும்;
என்ற இன்ன -
என்று சொல்லப்பட்ட இவை;தேவரும் மருளத்தக்க
செலவின -
தேவர்களும் கண்டு திகைக்கக் கூடிய (சிறந்த) நடையையுடையன;
எனினும் -
என்றாலும்;தேறேன் -(அவற்றைச் சீதையின் நடைக்கு
உவமையாகக் கூறத்) தெளிவு கொள்ளேன்;பா வரும் -செய்யுள்
இயற்றுவதில் பொருந்திய;கிழமைத் தொன்மைப்பருணிதர் -உரிமையுடைய
பழமையான (புலமை மிக்க) புலவர்கள்;தொடுத்த -இயற்றிய;பத்தி -
ஒழுங்கான;நா அரும் கிளவி -நாவில் எழுகின்ற அரிய சொற்களையுடைய;
செவ்வி நடை வரும் நடையள் -
காவியங்களின் அழகிய நடையை ஒத்த
நடையையு டையவளாவாள்.

     உலகத்துப் பெண்கள் நடைக்கு உவமையாகக் கூறப்படுகின்ற அன்னப்
பறவை முதலியவற்றின் நடையைச் சீதையின் நடைக்கு ஒப்பாகுமென்று நான்
சிறிதும் கருதமாட்டேன்; பழைய புலமை மிக்க புலவர்கள் இயற்றியுள்ள
காவியங்களின் நடை ஒப்பற்று விளங்குவதுபோல இந்தச் சீதையின் நடையும்
ஒப்பற்று விளங்கும் என்பது. நடை வரு நடை - வரு: உவமஉருபு.  நூலிலும்
நடையுண்டு; பெண்களுக்கும் நடையுண்டு ஆதலால், நூலின் நடை சீதையின்
நடைக்கு உவமை கூறப்பட்டது.  பருணிதர் - புலவர்.                64

4511.'எந் நிறம் உரைக்கேன்? - மாவின்
      இள நிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால்,
      மணி நிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும்
     வெளிப்படா ஒலிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்;
      மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!

மாவின் இள நிறம்  முதிரும் -(சீதையின் மேனி நிறத்திற்கு உவமை
வேண்டுமானால்) மாமரத்தின் இளந்தளிரினது நிறம் முதிர்ந்து மாறும்
இயல்பினது;பொன் நிறம் கருகும் -பொன்னின் நிறமும் (இவள் நிறத்துக்கு
முன்பு) கறுத்துத் தோன்றும் (ஆகையால் மாந்தளிர் நிறம் முதலியன
உவமையாகா; அவ்வாறே);மணி நிறம் உவமை போதா -இரத்தினங்களின்
நிறமும் உவமையாவதற்கு ஏற்ற ஒளியுடையதாகாது;மின் நிறம் நாணி -
மின்னலின் நிறமோ? (சீதையின்