பக்கம் எண் :

568கிட்கிந்தா காண்டம்

 கன்னி மாடத்திடைக்
     கண்டதும், கழறுவாய்.

     முன்னை நாள் -முன்னாளில்;முனியொடு -விசுவாமித்திர
முனிவருடன்;முதிய நீள் மிதிலை வாய்  -நீர்வளம் உள்ள பழமையான
மிதிலா நகரத்தில்;சென்னி நீள் மாலையான் -தலையில் நீண்ட மாலை
புனைந்தவனான சனக மன்னனது;வேள்வி காணிய -யாகத்தைக்
காண்பதற்காக;செல -(நான்) சென்றபோது;அன்னம் ஆடும் துறைக்கு
அருகு -
அன்னப் பறவைகள் (தத்தம் பேடைகளுடன்) விளையாடும்
நீர்த்துறைக்கு அருகிலுள்ள;அக் கன்னி மாடத்திடை -அந்தக் கன்னிகா
மாடத்தின் உப்பரிகையில்;நின்றாளை -நின்று கொண்டிருந்த சீதையை;
கண்டதும் -
பார்த்ததையும்;சுழறுவாய் -(நீ) அவளிடம் கூறுவாய்.

     விசுவாமித்திர முனிவன் இராமஇலக்குவரைத் துணையாக வைத்துக்
கொண்டு தனது வேள்வியை முடித்த பின்பு மிதிலையில் சனக மன்னன்
செய்யும் யாகத்தைக் காண்பதற்காக அவர்களுடன் சென்றான்; மிதிலையில்
புகுந்த பின்பு சனக மன்னனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியின்
அருகேயுள்ள கன்னி மாடத்தின்மேல் சீதையிருக்க அவளைத் தான் கண்டதை
இராமன் அடையாளமாக எடுத்துக் கூறுகின்றான்என்பது.               67

4514.'   ''வரை செய் தாள் வில்
      இறுத்தவன், அம் மா முனியொடும்
விரசினான் அல்லனேல், விடுவல்
      யான் உயிர்'' என,
கரை செயா வேலையின்
      பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்; அஃது எலாம்
      உணர, நீ உரைசெய்வாய்.

     கரை செயா வேலையின் -கரை அமைக்க முடியாத கடல் போன்ற;
பெரிய கற்பினள் -
சிறந்த கற்பினையுடைய சீதை;வரை செய் வில்தாள்
இறுத்தவன் -
மலையைப் போன்ற (சிவனுடைய) வில்லை ஒடித்தவன்;அம்
மாமுனியொடும் -
அத் தெய்வத் தன்மை பொருந்திய விசுவாமித்திர
முனிவனுடனே;விரசினான் அல்லனேல் -வந்தவனாக இல்லாமற் போனால்;
யான் உயிரை விடுதல் என -
நான் எனது உயிரை விட்டுவிடுவேன் என்று;
தெரிந்து உரை செய்தாள் -
ஆராய்ந்து கூறினாள்;அஃது எலாம் -அந்தச்
செய்திகள் அனைத்தும்;உணர நீ உரை செய்வாய் - (அவள்) தெளிவாக
அறியுமாறு நீ சொல்வாய்.

     இராமன் வில்லை முறித்த செய்தியைத்  தோழி யொருத்தி சொல்லக்
கேட்ட சீதை 'விசுவாமித்திர முனிவனுடன் வந்தவன் இந்த வில்லை
இறுத்தவனாக இல்லாவிட்டால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக்
கருதியிருந்ததைப் பின்பு