| கன்னி மாடத்திடைக் கண்டதும், கழறுவாய். |
முன்னை நாள் -முன்னாளில்;முனியொடு -விசுவாமித்திர முனிவருடன்;முதிய நீள் மிதிலை வாய் -நீர்வளம் உள்ள பழமையான மிதிலா நகரத்தில்;சென்னி நீள் மாலையான் -தலையில் நீண்ட மாலை புனைந்தவனான சனக மன்னனது;வேள்வி காணிய -யாகத்தைக் காண்பதற்காக;செல -(நான்) சென்றபோது;அன்னம் ஆடும் துறைக்கு அருகு -அன்னப் பறவைகள் (தத்தம் பேடைகளுடன்) விளையாடும் நீர்த்துறைக்கு அருகிலுள்ள;அக் கன்னி மாடத்திடை -அந்தக் கன்னிகா மாடத்தின் உப்பரிகையில்;நின்றாளை -நின்று கொண்டிருந்த சீதையை; கண்டதும் -பார்த்ததையும்;சுழறுவாய் -(நீ) அவளிடம் கூறுவாய். விசுவாமித்திர முனிவன் இராமஇலக்குவரைத் துணையாக வைத்துக் கொண்டு தனது வேள்வியை முடித்த பின்பு மிதிலையில் சனக மன்னன் செய்யும் யாகத்தைக் காண்பதற்காக அவர்களுடன் சென்றான்; மிதிலையில் புகுந்த பின்பு சனக மன்னனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியின் அருகேயுள்ள கன்னி மாடத்தின்மேல் சீதையிருக்க அவளைத் தான் கண்டதை இராமன் அடையாளமாக எடுத்துக் கூறுகின்றான்என்பது. 67 4514. | ' ''வரை செய் தாள் வில் இறுத்தவன், அம் மா முனியொடும் விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்'' என, கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய். |
கரை செயா வேலையின் -கரை அமைக்க முடியாத கடல் போன்ற; பெரிய கற்பினள் -சிறந்த கற்பினையுடைய சீதை;வரை செய் வில்தாள் இறுத்தவன் -மலையைப் போன்ற (சிவனுடைய) வில்லை ஒடித்தவன்;அம் மாமுனியொடும் -அத் தெய்வத் தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனுடனே;விரசினான் அல்லனேல் -வந்தவனாக இல்லாமற் போனால்; யான் உயிரை விடுதல் என -நான் எனது உயிரை விட்டுவிடுவேன் என்று; தெரிந்து உரை செய்தாள் -ஆராய்ந்து கூறினாள்;அஃது எலாம் -அந்தச் செய்திகள் அனைத்தும்;உணர நீ உரை செய்வாய் - (அவள்) தெளிவாக அறியுமாறு நீ சொல்வாய். இராமன் வில்லை முறித்த செய்தியைத் தோழி யொருத்தி சொல்லக் கேட்ட சீதை 'விசுவாமித்திர முனிவனுடன் வந்தவன் இந்த வில்லை இறுத்தவனாக இல்லாவிட்டால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கருதியிருந்ததைப் பின்பு |