பக்கம் எண் :

நாட விட்ட படலம் 569

இராமனிடம் சொல்லியிருக்கக் கூடுமாதலால் இங்கு அடையாளமாக அது
குறிக்கப் பெற்றது.                                              68

4515.'சூழி மால் யானையின் துணை
      மருப்பு இணை எனக்
கேழ் இலா வன முலைக்
      கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங்
      கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரசவைக்
      கண்டதும் அறைகுவாய்.

     சூழி மால் யானையி்ன் -முகபடா மணிந்த மதம் பிடித்த ஆண்
யானையினது;துணை மருப்பு இணையென -ஒன்றோடு ஒன்று ஒத்து
விளங்கும் இரண்டு தந்தங்கள் என்று கூறும்படி;கேழ் இலா -(அவற்றிற்கு)
ஒப்பாகாத;வனம் முலைக்கிரி -அழகிய முலைகளாகிய மலைகளை;சுமந்து
-
தாங்கி;இடைவது -(பாரத்தைப் பொறுக்க முடியாமல்) ஒடிவதாகிய;ஓர்
வானமின் இளங்கொடியின் -
ஒப்பற்ற வானத்திலுள்ள மின்னலின்
இளங்கொடி போல;வந்தாளை -வந்த வளாகிய சீதையை;அன்று -அக்
காலத்தில்;ஆழியான் அரசவைக் கண்டதும் -ஆணைச் சக்கரமுடைய
சனக மன்னனது சபையில் பார்த்ததையும்;அறைகுவாய் -சொல்வாய்.

     முலைக் கிரியைச் சுமக்கும் மின்னிளங் கொடி சீதைக்கு,
இல்பொருளுவமை.  சூழி: யானையின் முகத்திடும் அணி. வாழி - அசை. 69

4516.'முன்பு நான் அறிகிலா
      முளி நெடுங் கானிலே,
''என் பினே போதுவான்
      நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு
      இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ?''
      என்றதும் சொல்லுவாய்.

     ஏழை-மடமைப் பண்பு மிக்கவளே!நீ - நீ;முன்பு நான் அறிகிலா-
இதுவரை நான் கண்டறியாத;முளிநெடுங் கானிலே -தீய்ந்து போன பெரிய
காட்டிலே;என் பினே போதுவான் -என்னைப் பின் தொடர்ந்து வருமாறு;
நினைதியோ -
கருதுகின்றாயோ?இன்பம் ஆய் -(இதுவரை நீ எனக்கு)
மகிழ்ச்சியைத் தந்தவளாயிருந்து;ஆர் உயிர்க்கு -(எனது) பெறுதற்கு
அருமையான உயிருக்கும்;இனியை ஆயினை -