| ஆயினார், அவரும்; அங்கு அன்ன நாள் அவதியில் தாயினார் உலகினை, தகை நெடுந் தானையார். |
போயினார் -(அங்கதன் முதலிய வானர வீரர்கள் சுக்கிரீவனுடைய கட்டளைப்படி தென் திசை நோக்கிச்) சென்றார்கள்;போயபின் -(அவர்கள் அவ்வாறு) சென்ற பின்பு;இரவி காதலனும் -சூரியன் மகனான சுக்கிரீவனும்; புற நெடுந் திசைகள் தோறும் -(தென்திசைக்குப்) புறம்பான பெரிய பிற திசைகளில் எல்லாம்;ஏயினான் -(விநதன் முதலிய பல வீரர்களை) விடை கொடுத்தனுப்பினான்;ஏயின பொருட்கு -(சுக்கிரீவன்) ஏவின தொழிலாகிய சீதையைத் தேடுவதற்கு;ஆயினார் அவரும் -இசைந்தவரான அந்த வானர வீரரும்;உலகினைத் தகைநெடுந் தானையார் - உலகத்தையே (தமது வன்மையால்) எதிர்த்துத் தடுக்கவல்ல பெருஞ்சேனையை உடையவர்களாய்; அன்ன நாள் அவதியில் -(தம் அரசனான சுக்கிரீவன் குறித்த) அந்த ஒரு மாதத் தவணைக்குள் (தேடித் தருவதற்காக);தாயினார் -விரைந்து சென்றார்கள். மேற்கு, வடக்கு, கிழக்கு என்ற திசைகளில் இடபன், சதவலி, விநதன் என்ற வீரர்களை அனுப்பினான் என்பது. மூன்றாமடி : முற்றுமோனை. ஆங்கு: அசை. உலகினைத் தகை நெடுந்தானையார்: உலகம் முழுவதும் எதிர்த்துவரினும் தடுத்துப் போர் செய்யவல்ல பேராற்றல் வாய்ந்த வானரவீரர்என்பது. 1 4522. | குன்று இசைத்தன எனக் குவவு தோள் வலியினார், மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய், வன் திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழுடைத் தென் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரைசெய்வாம். |
குன்று இசைத்தன என -மலைகளே பொருந்துமாறு வைக்கப் பட்டுள்ளன வென்னும்படி;குவவுதோள் வலியினார் -அமைந்த திரண்ட தோள்வலிமையுடைய வானரவீரர்கள்;மின் திசைத்திடும் -மின்னலும் திகைக்கும் படியான;இடைக் கொடியை விராய் நாடினர் -இடையையுடைய பூங்கொடிபோன்ற சீதையைத் தேடினவர்களாய்;வன்திசைப்படரும் ஆறு - (கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று) திசைகளிலே செல்லுகின்ற வகை; ஒழிய -தவிர்த்து;வண்தமிழுடைத் தென்திசை -வளமான தமிழ்மொழி வழங்கும் தெற்குத்திசை;சென்றுளார் - |