சிந்துரப் பொடியாலும், மாணிக்கங்களாலும் சிவந்திருப்பது, நாகங்களும் நீரருவிகளும் நிறைந்திருப்பது, மலையுச்சியில் சந்திரன் ஒளிர்வது என்ற இவை விந்திய மலையிற் காண்பவை. இந்தியாறு : குற்றியலிகரம். (இந்து + யாறு) ஒப்பு : 'பாணி பிறை கொன்ற பணிசூடி மானேந்தி வேணி யரனைப் பொருவும் வேங்கடம்' (திருவேங்கட மாலை - 5) சிந்துராகம் - சிந்தூர ராகம் என்னும் வடமொழி விகாரம். ராகம் - நிறம். 3 4524. | அந் நெடுங் குன்றமொடு, அவிர் மணிச் சிகரமும், பொன் நெடுங் கொடிமுடிப் புரைகளும், புடைகளும், நல் நெடுந் தாழ்வரை நாடினார், - நவை இலார் - பல் நெடுங் காலம் ஆம் என்ன, ஓர் பகலிடை. |
நவை இலார் -குற்றமற்ற அந்த வானர வீரர்கள்;அந்நெடுங் குன்றமொடு -உயர்ந்துள்ள அந்த விந்திய மலையினிடத்தில்;அவிர் மணிச் சிகரமும் -ஒளிவீசும் இரத்தினங்களையுடைய சிகரங்களையும்;பொன் நெடுங்கொடு முடிப் புரைகளும் -அழகான நீண்ட அந்தச் சிகரங்களிலுள்ள குகைகளையும்;புடைகளும் -பக்கங்களையும்;நல் நெடுந் தாழ்வரை - அழகிய நீண்ட அடிவாரங்களையும்;ஓர் பகலிடை -ஓரு பகற்பொழுதுக்குள்ளாக;பல் நெடுங் காலம் ஆம் என்ன -மிகுதியான பல நாள்கள் தேடிக் காண்பது போன்று;நாடினார் -தேடினார்கள். வானரர்கள் மிகப் பலராயிருந்ததாலும், செய் தொழிலை மிக்க ஊக்கத்தோடு செய்ததாலும் பலகாலம் செய்யக்கூடிய பணிகளை ஒரு பகற்பொழுதிலேயே செய்துமுடித்தனர் என்பது. குன்றமொடு : வேற்றுமை மயக்கம். புரை : துளை - இங்கே குகையைக் குறித்தது. 4 4525. | மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறாவகையின், அச் சில் அல் ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார், புல்லினார் உலகினை, பொது இலா வகையினால், எல்லை மா கடல்களே ஆகுமாறு, எய்தினார். |
|