பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 577

     எல்லை மா கடல்களே -(பூமியைச் சுற்றிலும்) பெரிய எல்லை
யாகவுள்ள கடல்களே;ஆகுமாறு எய்தினார் -தமக்கு ஒப்பாகும் என்று
சொல்லுமாறு சென்ற அந்த வானரவீரர்கள்;மல்லல் மா ஞாலம் -வளமை
மிக்க பெரிய பூமியிலுள்ள உயிர்களுக்கு;ஓர் மறு உறா வகையின் -
எவ்விதத் துன்பமும் உண்டாகாத வகையில்;அச்சில் அல் ஓதிஐ -அந்தப்
பொன்தகட்டையணிந்த இருண்ட கூந்தலையுடைய சீதையை;இருந்த
உறைவிடம் -
(அவள்) தங்கியிருந்த இடத்தை;தேடுவார் -தேடுபவர்களாய்;
உலகினை -
(அவ்விந்திய மலையின்) பூமி முழு வதையும்;பொது இலா
வகையினால் -
தம்மையல்லாமல் வேறெவர்க்கும் எவ்விதத்
தொடர்புமில்லாதபடி;எய்தினார் -சென்று அடைந்தார்கள்.

     வானரர்கள் விந்தியமலையில் எந்த இடமும் விட்டுப்போகாதவாறு தாமே
பரவிநின்று முழுவதும் சீதையைத் தேடினார்களென்பது.  அம்சில் ஓதி -
அஞ்சில் ஓதி என விகாரமாகலாம்.  சில் : மகளிர் தலையிலணியும் தகட்டணி.
சில்அல் ஓதி : அன்மொழித் தொகைப் பன்மொழித்தொடர். உலகு : பரந்த
பூமியின் ஒரு பகுதி. ஓதியை என்றதில் பொருந்திய இரண்டாம் வேற்றுமை
உருபு பிரித்துக் காட்டப்பட்டது.  இருந்த உறைவிடம் என்பது இருந்துறைவிடம்
எனச் செய்யுட் சந்தம் நோக்கி அகரம் தொகுத்து இயையும்.             5

4526.விண்டு போய் இழிவர்; மேல்
      நிமிர்வர்; விண் படர்வர்; வேர்
உண்ட மா மரனின், அம்
      மலையின்வாய், உறையும் நீர்
மண்டு பார்அதனின், வாழ்
      உயிர்கள் அம் மதியினோர்
கண்டிலாதன, அயன்
      கண்டிலாதனகொலம்.

     அம்மதியினோர் -நல்லறிவுடைய அந்த வானரர்கள்;விண்டு போய -
(தனித்தனியே) பிரிந்து சென்று;இழிவர் - (சிலர்) இறங்கிச் செல்வர்;மேல்
நிமிர்வர் -
(சிலர்) மேலேறிச் செல்வர்;விண் படர்வர் -(சிலர்) வானத்தில்
தாவிச் செல்வர்;வேர் உண்ட மா மரனின் -வேர்களால் நீரை உறிஞ்சும்
மரங்களினிடத்தும்;அம்மலையன் வாய் -அந்த மலையினிடத்தும்;உறையும்
நீர் மண்டு -
தங்கிய நீர் நிரம்பப் பெற்ற;பார் அதனின் -பல
இடங்களிடத்தும்;வாழ் உயிர்கள் -வாழுகின்ற உயிர்களில்;கண்டிலாதன -
(அவ் வானர வீரர்களால்) தேடிக் காணப்படாதன இருக்குமானால் (அவை);
அயன் கண்டிலாதன ஆம் -
பிரமனால் படைக்கப் படாதவையேயாகும்.

     மரஞ் செறிந்த இடங்களும் வெற்றிடமும் புனல் நிரம்பிய இடமுமாய்
மூன்று பகுப்பாயுள்ள அந்த விந்தியமலை முழுவதிலும் பிரமனது படைப்பிற்கு
உட்பட்ட எல்லாவுயிர்களையும் வானரர்கள் தேடிப் பார்த்தார்களென்பது.