ஆடு இடங்களும் -வந்து சஞ்சரிக்கும் இடங்களையும்;சுரும்பு மூசு தேன் -சுரும்புகளும், நறுமண மலர்களில் மொய்க்கும் தேன் என்ற வண்டுகளும்; பன்னி ஆடு இடங்களும் -பாடித் திரிகின்ற இடங்களையும்;பரந்து சுற்றினார் -துழாவித் தேடித் திரிந்தார்கள். நருமதையாற்றின் பெருஞ்சிறப்பாலும், அதனைச் சார்ந்த இடங்களின் மிக்க இனிமையாலும் அங்கே தேவமாதர்களும், தேவர்களும் வரலாயினர் என்பது. சுரும்பு, தேன்: வண்டின் வகைகள். சுரும்பு எனும் வண்டுகள் எல்லாப்பூமணத்திலும் செல்லும் தன்மையன என்றும், தேன் என்னும் வண்டுகள் நறுமண மலரிடத்தே மட்டும் செல்லும் தன்மையன என்றும் கூறுவர். 8 4529. | பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார், அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ் நிறை நறுந் தாமரை முகமும், நித்தில முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார். |
பெறல் அருந் தெரிவையை -பெறுதற்கு அரிய சீதையை;நாடும் பெற்றியார் -தேடும் தன்மையுடையவர்களான வானரர்கள்;அறல் நறுங் கூந்தலும் -கருமணலாகிய நறுமணமுள்ள அவளது கூந்தலையும்;அளக வண்டுசூழ் நிறை -கூந்தல் போலக் கருநிறமுள்ள வண்டுகள் சூழ்ந்து நிறைந்துள்ள;நறுந்தாமரை முகமும் -தாமரை மலராகிய அவளது முகத்தையும்;நித்தில முறுவலும் -(அலைகளால் கொழிக்கப்படுகின்ற) முத்துக்களாகிய அவளுடைய பற்களையும்;காண்பர் -காண்பார்கள்; முழுதும் காண்கிலார் -(ஆனால்) சீதையின் உருவ முழுவதையும் ஒருசேரக் காணாதவரானார்கள். ஆல் - அசை. சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் நருமதையாற்றின்கரையில் அச் சீதையின் உருவ முழுவதையும் பார்க்கமுடியாமல் அவளது முகத்திற்கும் அந்த முகத்திலுள்ள உறுப்புகளுக்கும் ஒப்பான சில பொருள்களை மட்டுமே கண்டனர்; தாம் தேடிவந்த சீதையின் முழுஉருவத்தையும் நிகர்த்தனவற்றைக் காணவில்லை. போலிகளிலும் முழுமையானவற்றை - சீதைக்கு முழுமையாக ஒப்பு கூறத்தக்கனவற்றை வானரர் காணவில்லை. நருமதையாற்றில் கருமணல் சீதையின் கூந்தலையும், தாமரை மலர்கள் முகத்தையும், அதன் கரையில் கிடக்கும் முத்துக்கள் பற்களையும் ஒக்கும் என்பது. அளக வண்டுசூழ் தாமரைமுகம் - உவமையை அங்கமாகக் கொண்ட உருவகம். அறற் கூந்தல், நித்தில முறுவல் - உருவகம். காண்பரால் முழுதும் காண்கிலார்: முரண்தொடை. 9 4530. | செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர், தரும தயா இவை தழுவும் தன்மையர், பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல் நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார். |
செரு மத யாக்கையர் -போர் புரிவதில் எக்களிப்புக் கொண்ட உடம்பினையுடையவர்களும்;திருக்கு இல் சிந்தையர் -மாறுபாடற்ற |