பக்கம் எண் :

580கிட்கிந்தா காண்டம்

மனமுடையவர்களும்;தருமம்தயா இவை தழுவும் தன்மையர் -தரும மும்
அருளும் இயல்பாக அமைந்த தன்மையுடையவர்களுமாகிய வானரர்கள்;
பொரு மத யானையும் -
போர் செய்கின்ற மதங் கொண்ட
ஆண்யானைகளும்;பிடியும் -பெண் யானைகளும்;புக்கு உழல் -புகுந்து
விளையாடுகின்ற;நருமதை ஆம் எனும் நதியை -நருமதை என்னும் பேர்
கொண்ட ஆற்றை;நீங்கினார் -கடந்து சென்றார்கள்.

     யாக்கை : உதிரம் முதலான எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது
என்று உடலுக்குக் காரணக்குறி.  திருக்கு இல்சிந்தையர்:  (குரங்குத்
தன்மையால்) மாறாமல் ஒருபடித்தாய மனமுடையவர். ஆம் :அசை.     10

ஏழுகூட மலையை வானரர் அடைதல்

4531. தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம்,
நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய,
வாம கூடச் சுடர் மணி வயங்குறும், -
ஏமகூடத் தடங் கிரியை எய்தினார்.

     தாமகூடத் திரைதீர்த்த சங்கம் ஆம் -ஒளியமைந்த சிகரங்களிலி
ருந்து தோன்றுகின்ற அலைகளையுடைய ஆறுகளின் சங்கமம் ஆகிய;நாம
கூடு அப்பெருந் திசையை நல்கிய -
புகழுடன் கூடியதும் பெரியதும் ஆகிய
அத்திசையைப் பாதுகாப்பதாகிய;வாம கூடச் சுடர் மணி வயங்குறும் -
அழகிய தொகுதியாகிய ஒளியையுடைய இரத்தினங்கள் விளங்குகின்ற;ஏம
கூடத் தடங்கிரியை -
ஏமகூடமென்னும் பெரிய மலையை;எய்தினார் -
போய் சேர்ந்தார்கள்.

     பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும் மிகச் சிறந்த இரத்தினங்களும்
நிரம்பப் பெற்றது ஏமகூடமலை என்பது.  ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில்
ஒன்று. மேருவின் தெற்கு இமயத்துக்கப்பால் 9000 யோசனையில் உள்ளது
என்ற அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது.  தாமம் - ஒளி; நாமம் - புகழ்;
வாமம் - அழகு; ஏமம் - பொன். திரிபு என்னும் சொல்லணி இப்பாடலில்
வந்துள்ளது.  முதலடியில் 'கூடம்' சிகரத்தையும், மூன்றாமடியில்
தொகுதியையும் குறித்தது.                                       11

4532.மாடு உறு கிரிகளும்,
      மரனும், மற்றவும்,
சூடு உறு பொன்
      எனப் பொலிந்து தோன்றுறப்
பாடு உறு சுடர்
      ஒளி பரப்புகின்றது;
வீடு உறும் உலகினும்
      விளங்கும் மெய்யது;

     மாடு உறு கிரிகளும் -(அந்த ஏமகூட மலை) பக்கத்திலுள்ள
மலைகளும்;மரனும் -மரங்களும்;மற்றவும் -பிற பொருள்களும்;