பக்கம் எண் :

582கிட்கிந்தா காண்டம்

     பரவிய கனக நுண் பராகம் -பரவியுள்ள பொன்னின் சிறுதுகள்கள்;
பாடு உற -
தம்மிடத்தில் பொருந்த;எரிசுடர்ச் செம்மணி -விளங்குகின்ற
ஒளியையுடைய சிவந்த பதுமராக இரத்தினங்களின்;ஈட்டத்தோடு இழி
அம்திரள் -
தொகுதியோடு கீழே இறங்குகின்ற;அருவிகளும் -
அருவிகளாகிய அழகிய கூட்டங்களும்;அலங்கு தீயிடை -எரிகின்ற
நெருப்பிலே;உருகு பொன் -உருகிய பொன்னானது;பாய்வ போன்று -
பாய்ந்தோடுவது போல;ஒழுகுகின்றது -ஒழுகப்பெறும் தன்மையது.

     பொற்கொடிகள் பொருந்திச் செம்மணியின் நிறமமைந்த பெருகுகின்ற
நீர்ப் பெருக்கிற்கு, நெருப்பிலுருக்கி ஓடவிட்ட பொன்னை உவமையாகக்
குறித்தார்.

     கனக பராகம்: பொன்துகள்; செம்மணி: மாணிக்கம்.  செம்மணிகளில்
பொன்மயமான அருவிகள் பாய்வது, தீயினிடையில் பொன்
உருகுவதுபோலுமென வருணித்தவாறு.                           14

4535.விஞ்சையர் பாடலும், விசும்பின்
      வெள் வளைப்
பஞ்சின் மெல் அடியினார்
      ஆடல் பாணியும்,
குஞ்சர முழக்கமும்,
      குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும்,
      மயங்கும் மாண்பது;

     விஞ்சையர் பாடலும் -(அங்கு வந்துள்ள) வித்தியாதரர்களின்
பாட்டொளியும்;விசும்பின் வெள்வளைப் பஞ்சின் மெல் அடியினார் -
தேவலோகத்திலிருந்து வந்தவரான வெண்மையான வளையல்களை யணிந்த
பஞ்சுபோன்ற மெல்லிய அடிகளையுடைய தேவமாதர்களின்;ஆடல்
பாணியும்-
ஆடலோடு இசைந்த தாளங்களின் ஒலியும்;குஞ்சர
முழக்கமும் -
யானைகளின் பிளிற்றோசையம்;குமுறு பேரியின் -
முழங்குகின்ற முரசுபோன்ற;மஞ்சு இனம் உரற்றலும் -(அங்கு வந்து
தங்கும்) மேகக்கூட்டங்களின் இடியோசையும்;மயங்கும் -கலந்துள்ள;
மாண்பது -பெருமையுடையது.

     ஆடல்பாணி: நாட்டியத்துக்கேற்ற தாளம்.  பாணி: கையினால்
ஒத்தறுத்துத் தாளம்போடுவது.                                    15

அதனை இராவணன் மலையென ஐயுறுதல்

4536. அனையது நோக்கினார், அமிர்த
      மா மயில்