உன்னி - (அவ்வாறு வானரர்கள் வந்து) படுத்துறங்குவதை அறிந்து;தண்டா வென்றி - குறையாத வெற்றியையுடைய;தகவு இல்லான் -நற்குணமில்லாத ஓர் அசுரன்;வந்தான் -(அவ் இடத்திற்கு) வரலானான். அன்று, ஓ : அசைகள். வானரவீரர்கள் தாங்கள் வந்து சேர்ந்த பொய்கைக் கரையிலே காய் கனி முதலியவற்றைத் தின்று ஆழ்ந்து உறக்கங் கொள்ள, அப்போது ஓர் அசுரன் அதனை அறிந்து அங்கு வந்தான் என்பது. தாக்குதற்கு ஏற்ற நேரம் எனக் கருதினான், அவ் அரக்கன். தானவர்: அரக்கரின் வேறான அசுரர். இங்குக் கூறப்பெற்ற அசுரன் துமிரன் என்பவன். 1 4595. | மலையே போல்வான்; மால் கடல் ஒப்பான்; மறம் முற்ற, கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர் நிலையே போல்வான்; நீர்மை இலாதான்; நிமிர் திங்கட் கலையே போலும் கால எயிற்றான்; கனல் கண்ணான்; |
(அந்த அசுரன்) மலையே போல்வான் -(தோற்றத்தில்) மலையைப் போன்றவன்;மால் கடல் ஒப்பான் -(உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்) பெரிய கரிய கடலைப் போன்றவன்;மறம் முற்ற, கொலையே செய்வான் - கொடுமையில் முதிர்ச்சியடைந்து யாவரையும் கொன்று தீர்ப்பவன்;கூற்றை நிகர்ப்பான் -இயமயையேஒத்திருப்பவன்;கொடுமைக்கு - கொடுமையென்னும் குணத்திற்கு;ஓர் நிலையே போல்வான் -ஓர் இருப்பிடமாவான்;நீர்மை இலாதான் -நற்பண்பு சிறிதும் இல்லாதவன்;நிமிர் -(வானில்) எழுந்து விளங்கும்;திங்கட் கலையே போலும் -சந்திரனின் பிறை போல் விளங்கும்;கால எயிற்றான் -நச்சுப்போன்ற பற்களையுடையவன்;கனல் கண்ணான் -(நெருப்புப் போன்று) கனல் கக்கும் கண்களையுடைவன். அந்த அசுரனின் உருவத்தின் வலிமை உயர்வு முதலியவற்றிற்கு மலையும், நிறம், பெருமை விரிவு முதலியவற்றிற்குக் கடலும் உவமைகளாயின. மால்: கருமை, பெருமைகளை உணர்த்தியது. காலம்: கரியநஞ்சு. 2 கலிவிருத்தம் 4596. | கருவி மா மழைகள் கைகள் தாவி மீது உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால், பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால், அருவி பாய்தரும் குன்றமே அனான்; |
|