(அந்த அசுரன்)கருவி மாமழை -(உலகம் நடைபெறுவதற்கு) முதற்காரணமான பெரிய மேகங்கள்;கைகள் தாவி -அவன் கைகளில் தாவி; மீது உருவி மேனி சென்று -ஊடுருவி அவனது உடலில் சென்று;உலவி - உலாவி;ஒற்றலால் -படிதலாலும்;பொருவு இல்மாரி -ஒப்பில்லாத மழைநீர்; மேல் ஒழுகு பொற்பினால் -அவன் மேல் பெருகி வழிந்த அழகாலும்; அருவி பாய்தரும் -நீரருவிகள் பாய்ந்தோடி வரும்;குன்றமே அனான் - ஒரு மலையையொத்தவனானான். கருவி: காரணம். மின்னல் இடி முதலியவற்றோடு கூடி வருவதால் கருவி மழை என்பதைத் தொகுதியான பெரிய மேகம் எனவும் கொள்ளலாம். பழைய நூல்களில் இவ்வழக்கு உண்டு. (குறுந். 42, மணி. 17-92) அந்த அசுரனின் தோள்கள்மேலும் உடம்பின் மேலும் மேகங்கள் தவழ்ந்து பெருகுமாறு மழைநீரைப் பொழிவதால், மேகங்கள் தன்மேல் உலாவப் பெற்று நீரருவி பாயும் மலை அவனுக்கேற்ற உவமையாகும். சிலேடையணி. 3 4597. | வானவர்க்கும், மற்று அவர் வலிக்கு நேர் தானவர்க்குமே அரிய தன்மையான்; ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட, வேறு ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ? |
வானவர்க்கும் -(அந்த அசுரன்) தேவர்களுக்கும்;அவர் வலிக்கு நேர் தானவர்க்கும் -அத் தேவரின் வலிமைக்கு ஒப்பான அசுரர்களுக் கும்; அரிய -வெல்லமுடியாத;தன்மையான்-வலிமையுடையவன்;ஆனவர்க்கு அலால் -(ஆகவே) அத்தகைய தேவர், அசுரர்களுக்கே யல்லாமல்; அவனோடு ஆட -அந்தக் கொடிய அசுரனை எதிர்த்துப் போரிட;வேறு ஏனவர்க்கும் -மற்றுமுள்ள எவராயினும்;ஒன்று எண்ண ஒண்ணுமோ - சிறிதேனும் நினைக்க முடியுமோ? (நினைக்க முடியாது). மற்று: அசை. அந்த அசுரனோடு போர் செய்தல் தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே முடியாதென்றால் மற்ற யாரால் முடியும்? ஒருவராலும் இவனோடு போர் செய்து வெல்லுவதை நினைக்கவும் முடியாது என்பது. ஏனவர்:பிறர். 4 4598. | பிறங்கு பங்கியான்; பெயரும் பெட்பினில் கறங்கு போன்றுளான், பிசையும் கையினான்; அறம் கொள் சிந்தையார், நெறி செல் ஆய்வினால் உறங்குவாரை வந்து, ஒல்லை எய்தினான். |
|