பக்கம் எண் :

622கிட்கிந்தா காண்டம்

    பிறங்கு பங்கியான் -விளங்கும் செம்பட்டை மயிரையுடையவன்;
பெயரும் பெடபினில் -
(தான் நடந்து) செல்லும் தன்மையில்;கறங்கு
போன்று உளான் -
காற்றாடியை யொத்துள்ளவனாய்;பிசையும் கையினான்-
(கோபத்தால்) பிசையும் கைகளையுடையவன்;அறம் கொள் சிந்தையார் -
தரும சிந்தனையுள்வர்களும்;நெறி செல் ஆய்வினால் -வழி நடந்துவந்த
களைப்பினால்;உறங்குவாரை -தூங்குகின்றவர்களுமாகிய அந்த வானர
வீரர்களை;ஒல்லை வந்து எய்தினான் -விரைவில் வந்து சேர்ந்தான்.

     இராமபிரானின் தொண்டில் கருத்தாய்ச் செல்லுவதால் வானரரை
'அறங்கொள் சிந்தையார்' என உயர்த்திக் கூறினார்.  ஆய்வு: நுணுகுதல்
(இளைத்தல்).  கை பிசைதல்: கொடுமைக்குறி. பங்கி: ஆண்பால் தலைமயிர். 5

அங்கதன் மார்பில் அசுரன் கையால் அறைதல்

4599.'பொய்கை என்னது என்று
      உணர்ந்தும், புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது
      எனா?' எனா
ஐயன் அங்கதன்
      அலங்கல் மார்பினில்,
கையின் மோதினான்; -
      காலனே அனான்.

     காலனே அனான் -யமனைப் போன்றவனாகிய துமிரன் என்ற அந்த
அசுரன்;பொய்கை என்னது என்று உணர்ந்தும் -இந்தத் தடாகம் எனக்கு
உரியது என்று அறிந்தும்;எய்தினார்கள் -இங்கு வந்து சேர்ந்தவர்களாகிய;
புல்லியோர் -
அற்பர்கள்;யார் -யாவர்;ஆ இது என் -ஆ இது என்ன
வியப்பு!எனா -என்று சொல்லிக் கொண்டு;ஐயன் அங்கதன் -
தலைவனான அங்கதனுடைய;அலங்கல் மார்பினில் -மாலையணிந்த
மார்பிலே;கையின் மோதினான் -(தன்) கையினால் அறைந்து தாக்கினான்.

     'இப் பொய்கை எனது என்று யாவருக்கும் தெரிந்திருந்தும் இங்கு வந்து
சேர்ந்தவர்கள் அறிவில்லாதவர்களே; இப்படியும் அறிவில்லாதவர்கள்
இருக்கின்றார்களே' என்று மிக்க செருக்கினால் கூறிக் கொண்டே ஆழ்ந்து
உறங்கும் அங்கதனது மார்பில் ஓங்கியறைந்தனன் துமிரன் என்பது.  ஆ -
வியப்பிடைச் சொல். இது எனா என்பதிலுள்ள ஆகாரம் பிரித்துக்
கூட்டப்பட்டது.                                                  6

அங்கதன் பதிலுக்கு அறைய, துமிரன் அலறி வீழ்தல்

4600. மற்று அம் மைந்தனும்
      உறக்கம் மாறினான்;
'இற்று இவன் கொலாம்
      இலங்கை வேந்து' எனா,