பக்கம் எண் :

ஆறு செல் படலம் 625

     திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில்
பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால்
உலகத்திலுள்ள பல செய்திகளைத் தெரிந்திருத்தல் பற்றி அவன் இந்த
அசுரனைக் குறித்து இன்னானென்று வினவியறிந்திருந்தான் என்பது. தூ நிவந்த
வேல்: துமிரனது வேலின் வெற்றிச் சிறப்பைக் கூறுவது. தூ - புலால்.
அங்கதன் இத் துமிரன் என்னும் அசுரனைக் கொன்ற செய்தி வானரர் பிலம்
புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாகக் கூறும்வான்மீகம்.                      10

வானரர் பெண்ணையாற்றை அடைதல்

4604.'வேறும் எய்துவார் உளர் கொலாம்' எனா,
தேறி, இன் துயில் செலவு தீர்ந்துளார்,
வீறு செஞ் சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற, நாள்மலர்ப் பெண்ணை நாடுவார்.

     வேறும் -இவ் வசுரனையல்லாமல் வேறு சிலரும்;எய்துவார்
உளர்கொல் ஆம் எனா -
இங்கு போருக்கு வரக் கூடியவர் இருக்கி
றார்களோ என்று கருதி;இன்துயில் செலவு தீர்ந்துள்ளார் -(தமது) இனிய
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து (அவ்வாறு வருபவர்களைச் சிறிதுநேரம்
எதிர்நோக்கின் பின்பு);தேறி -இனி எவரும் வாரார் எனத் தெளிந்து;வீறு
செஞ்சுடர்க் கடவுள் -
பெருமை மிக்க சிவந்த கதிர்களையுடைய சூரியன்;
வேலை வாய் நாற -
கிழக்குக் கடலிடத்துத் தோன்ற;நாள் மலர்ப்
பெண்ணை -
புதிதாய் மலர்ந்த மலர்கள் நிறைந்த பெண்ணையாற்றை;
நாடுவார் -
நோக்கிச் சென்றனர்.

     வானரவீரர் 'இன்னும் இவன்போன்ற அசுரர் வேறு யாரேனும் போருக்கு
வரக் கூடும்' என்று கருதித் தூங்காமல் விழித்திருந்து எதிர்பார்த்த பின்பு,
சூரியன் உதிக்கும் வேளையில் சீதையைத் தேடுமாறு அங்கிருந்து புறப்பட்டுப்
பெண்ணையாற்றை அடைந்தனர்.  வேறும்  - எச்சவும்மை. வீறு : பிறர்க்கு
இல்லாத தனிப் பொலிவு. நாறுதல் :தோன்றுதல்.                    11

4605.புன் நை வெம் முலைப்
      புளினம், ஏய் தடத்து
உண்ண ஆம்பல் இன்
     அமிழ்தம் ஊறு வாய்,
வண்ண வெண் நகைத்
      தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் -
      பெண்ணை நாடுவார்.

     பெண்ணை நாடுவார் -சீதையைத் தேடிச் சென்ற அவ்வானர
வீரர்கள்;புள் நை -சக்கரவாகப் பறவைகள் (ஒப்பாகாமல்) வருந்துவதற்குக்
காரணமான;புளின வெம்முலை -மணற்குன்றுகளாகிய விரும்பத்தக்க