போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது;அலங்கு தாள் இணை -விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும்;தாங்கிய -தாங்கி நின்ற; அம்மலை -அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற;விலங்கும் - மிருகங்களும்;வீடு உறுகின்றன -மோட்சத்தையடைகின் றன (அவ்வாறானால்);மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு -உண்மை நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர் முதலோர்க்கு;அனையது - அந்த மோட்சமானது;பொய்க்குமோ- கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது). மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும் மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால் தவவொழுக்கங்களில் நடக்கின்ற யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது. விலங்கும்: உம்மை இழிவுசிறப்பு. திருவேங்கடமலை வீட்டுப் பதவியைத் தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார். 36 4630. | ஆய குன்றினை எய்தி, அருந்தவம் மேய செல்வரை மேயினர், மெய்ந் நெறி நாயகன்தனை நாளும் வணங்கிய தூய நல் தவர் பாதங்கள் சூடினார். |
ஆய குன்றினை -(வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும் அமைந்த திருவேங்கடமலையை;எய்தி -அடைந்து;அருந்தவம் மேய செல்வரை -அரிய தவத்தைப்பொருந்திய தவயோகிகளை;மேவினர் - அடைந்து;மெய்ந்நெறி நாயகன்தனை -என்றும் அழியாத மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனை;நாளும் வணங்கிய - தினமும் வணங்கி வழிபாடு செய்த;தூய நல்தவர் -தூய்மையான சிறந்த தவத்தையுடைய அப் பெரியவர்களின்;பாதங்கள் சூடினார் -திருவடிகளைத் தம் தலைமேல் சூடி வணங்கினார்கள். திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால் அவர்களை 'அருந்தவமேய செல்வர்', 'தூய நல் தவர்' என்றுகூறினார். 37 தொண்டை நாட்டை அடைதல் 4631. | சூடி, ஆண்டு அச் சுரி சூழல் தோகையைத் தேடி, வார் புனல் தெண் திரைத் தொண்டை நல் நாடு நண்ணுகின்றார், மறை நாவலர் வேடம் மேயினர், வேண்டு உரு மேவுவார். |
|