வேண்டு உரு மேவுவார் -விரும்பிய வடிவங்களை எடுக்கும் திற மையுடைய வானரர்கள்;சூடி -(தவயோகிகளின் திருவடிகளைத் தம்) தலையில் சூடிய பின்பு;ஆண்டு -அத் திருவேங்கட மலையில்;அச் சுரிகுழல் தோகையை -சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சீதையை; தேடி -அங்கே தேடிப் பார்த்து(க் காணாமல்);மறைநாவலர் வேடம் மேயினர் -வேதங்களில் வல்ல அந்தணர்களின் வேடத்தைப் பூண்டவர்களாய்;தெண் திரை -தெளிந்த அலைகளையுடைய;வார் புனல் - மிக்க நீர் நிறைந்த;தொண்டைநல் நாடு -சிறந்த தொண்டை நாட்டை; நண்ணுகின்றார் -சேர்பவரானார்கள். கரிகுழல் தோகை: அடையடுத்த இருமடியாகு பெயர். 'தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்றவாறு மிகுந்து சான்றோரை மிகுதியாகக் கொண்ட நாடாதலால் 'வார் புனல் தெண்திரைத் தொண்டை நன்னாடு' என்றார். 38 4632. | குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர் முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல் சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம். |
மருங்கு எலாம் -(அத் தொண்டை நாட்டின்) இடங்களெல்லாம்;குன்று சூழ்ந்த கடத்தொடும் -மலைகள் சூழ்ந்த சாரல்களும் (குறிஞ்சியும்); கோவலர் மூன்றில் -இடையர்களின் முற்றங்களை;சூழ்ந்த படப்பையும் - சூழ்ந்துள்ள தோட்டங்களும் (முல்லை நிலமும்); மொய் புனல் சென்று சூழ்ந்த -மிக்க நீர்சுற்றிலும் பாய்ந்து நிறைந்துள்ள;கிடக்கையும் - இடங்களான மருத நிலங்களும்;தெண் திரை -தெளிந்த அலைகளையுடைய; மன்று சூழ்ந்த பரப்பும் -மணல் வெளியான இடங்கள் சூழ்ந்த நெய்தல் நிலமும் (உள்ளன). வினை முற்று (உள்ளன) வருவித்து முடிக்கப்பட்டது. இதனால் அத்தொண்டை நாடு நால்வகை நிலங்களும் கொண்டிருத்தலைக் கூறினார். கோவலர்: பசுக்களை மேய்த்துக் காப்பவர். படப்பை : வரகு முதலியன விளைதற்குரிய தோட்டம். மன்று: வெளியான இடம். முன்றில் : இலக்கணப் போலி. 39 4633. | சூல் அடிப் பலவின் சுளை தூங்க தேன், கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச் சால் அடித் தரும் சாலியின் வெண் முளை, தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன. |
குல மள்ளர் -வேளாண் குலத்தவராய உழவர்கள்;கோல் அடிப்ப - உழும்போது உழவு எருதுகளைக் கோலினால் அடிக்கையில்;தோல் அடிக் கிளை அன்னம் -தோல் செறிந்த அடிகளையுடைய |