கூட்டமான அன்னப் பறவைகள்;வெரீஇ -அஞ்சி;சூல் அடிப் பலவின் - கருவை அடியிலே கொண்ட பலாமரத்தினது (வேர்ப்பலாவின்);சுளை தூங்கு தேன் -(பலாச்) சுளையிலிருந்து ஒழுகுகின்ற தேன் (பாய்ந்து);ஏர்ச்சால் அடித்தரும் -உழவுச் சாலின் இடங்களிலே முளைத்துள்ள;சாலியின் வெண்முளை -நெற்பயிரின் வெண்மையான முளைகளை;துவைப்பன - (கால்களால்) மிதித்துத் துவைப்பனவாம். உழவர்கள் ஏர் உழும் போது உழவு மாடுகளை அடித்துத் துரத்த பக்கத்தேயிருந்த அன்னப் பறவைகள் அதனால் அஞ்சி அண்மையில் பலாச் சுளைகளின் தேன்பாய முளைத்துள்ள வயல்களில் விரைந்தோட, அவற்றின் முளைகள் சிதையும் என்பது கருத்து. சூல்: கருப்பம்; இங்கு வேர் என்னும் பொருளது, சூல் அடிப் பலா: வேர்ப் பலா. கோல்: தாற்றுக் கோல். இச் செய்யுளில் மருத வளம் கூறப்பெற்றுள்ளது. 40 4634. | செருகுறும் கணின் தேம் குவளைக் குலம் அருகு உறங்கும் வயல் மருங்கு, ஆய்ச்சியர் இரு குறங்கு பிறங்கிய வாழையில் குருகு உறங்கும்;குயிலும் துயிலுமால். |
செருகு உறும் கணின் -கூந்தல் வரை நீண்டுள்ள (மகளிரின்) கண் போன்ற; தேம் குவளைக் குலம் -தேனையுடைய குவளைப் பூக்களின் கூட்டம்;அருகு உறங்கும் -பக்கங்களில் உறங்குவது போலக் குவிந்திருக்கும்;வயல் மருங்கு -நீர் நிறைந்த வயலிடங்களில்;ஆய்ச்சியர் -(அந்த நாட்டு) இடைச்சியரின்;இரு குறங்கு பிறங்கிய வாழையில் - இரண்டு தொடைகளைப் போல விளங்கிய வாழை மரங்களிலே;குருகு உறங்கும் -நாரைகள் தூங்கும்;குயிலும் துயிலும் -(அங்கே) குயில்களும் தூங்கிக் கொண்டிருக்கும். ஆல்: ஈற்றசை. பகற்பொழுதில் குவளைமலர்கள் குவிந்து குறுகியிருக்குமாதலால் அவை மகளிரின் குறுகிய கடை நோக்கிற்கு உவமையாயின. வாழை: மகளிர் தொடைக்கு உவமை; எதிர் நிலையணி: இந்த அணியினால் குவளைமலர், வாழை என்ற இவற்றை விட மகளிரின் கண்ணும், தொடையும் மிகுந்த சிறப்புடையன என்பது பெறப்படும். முடித்துச் செருகப்படுவதால் கூந்தல் 'செருகு' எனப்பட்டது; முதனிலைத் தொழிலாகு பெயர். 41 4635. | தெருவின் ஆர்ப்புறும் பல் இயம் தேர் மயில் கருவி மா மழை என்று களிப்புறா; பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா; - மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்கொலோ? |
|