கரு நீர்க் காக்கை -கரிய நிறமுள்ள நீர்க் காக்கைகள்;குழுவும் மீன் -கூட்டமாகத் திரளும் தன்மையுள்ள மீன்கள்;வளர் - வளர்வதற்கு இடமான; குட்டம் எனக் கொளா -சிறு குட்டையென்று நினைத்து;எழுவு பாடல் - (சுருதி கூட்டுவதற்கு) எழுப்புகின்ற பாடல்போல;இமிழ் கரும்பு எந்திரத்து - ஒலிக்கின்ற கரும்பாலையிலிருந்து;ஒழுகு சாறு -பெருகுகின்ற கரும்புச்சாறு (கரும்புப் பால்) நிறைந்த;அகல் கூனையின் -வாய் அகன்ற மிடாவில்; ஊழ்முறை முழுகி -ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி;முளைக்கும் -மேலே கிளம்பும். ஏ: ஈற்றசை. ஆலையாடிக் கரும்புச் சாறு நிரம்பிய மிடாவை நீர்க் காக்கைகள் மீன்கள் நிரம்பிய குளங்களென்று மயங்கி அவற்றில் தம் உணவாகிய மீன்களைக் கொத்தித் தின்பதற்காக மூழ்கி மூழ்கி இரை பெறாது வெளிக் கிளம்பும் என்பது. சோழநாட்டின் வளம் புலனாகிறது. இதுவும் மயக்கவணி. கூனை: கரும்புச் சாறு காய்ச்சுவதற்குரிய வாயகன்றகலம். 48 4642. | பூ நெருங்கிய புள் உறு சோலைகள் தேன் ஒருங்கு சொரிதலின், தேர்வு இல, மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ, பல வானரங்கள் மரங்களின் வைகுமால். |
பூ நெருங்கிய -மலர்களில் படிந்து மொய்க்கின்ற;புள் உறு சோலைகள் -வண்டுகள் மிகுதியாகப் பொருந்திய சோலைகள்;தேன் ஒருங்கு சொரிதலின் -தேனை மிகுதியாகப் பொழிவதால் (அந்தத் தேனின் பெருக்கைக் கண்டு);பல வானரங்கள் -(அச் சோலையில் வாழும்) பல குரங்குகள்;தேர்வு இல -(உண்மையை) ஆராயாமல்;மீன் நெருங்குறும் - மீன்கள் நிறைந்துள்ள;வெள்ளம் வெரீஇ -நீர் வெள்ளமென்று அச்சமுற்று; மரங்களின் வைகும் -(கீழே இறங்காமல்) மரக் கிளைகளிலேயே தங்கியிருக்கும். ஆல்: ஈற்றசை. சோலைகளிலுள்ள மலர்கள் தேனை மிகுதியாகச் சொரிவதால் அந்தத் தேனின்பெருக்கை நீர்வெள்ளமென்று தவறாகக் கருதி அச்சப்பட்டு அங்குள்ள வானரங்கள் யாவும் தரையில் இறங்காமல் மரங்களிலேயே தங்கும் என்பது மயக்கவணி. தேன்மிகுதி பெறப்படுவதால் வீறுகோளணி. வெருவி என்ற எச்சம் வெரீஇ யெனத் திரிந்தது - சொல்லிசையளபெடை. 49 4643. | தாறு நாறுவ, வாழைகள்; தாழையின் சோறு நாறுவ, தூம்புகள்; மாங்கனி நாறு நாறுவ; நாறு வளர்க்குறும் சேறு நாறுவ, செங்கழுநீர்அரோ. * |
வாழைகள் -வாழை மரங்கள்;தாறு நாறுவ -குலைகள்தள்ளி மணம் பரப்புவன;தூம்புகள் -மூங்கில்கள்;தாழையின் சோறு -தாழை மலர்களின் சுண்ணப் பொடிகள் படியப் பெற்று; நாறுவ - |