பக்கம் எண் :

சம்பாதிப் படலம் 651

எடுத்து -வெண்மையான அலைகளாகிய கைகளை மேலே எடுத்து;உழைத்
தடங்கண்ணி -
மான்போன்ற அகன்ற கண்களையுடைய சீதை;இலங்கையாள்
-
இலங்கையில் இருக்கிறாள்;என்று உரைத்திட்டு -என்று சொல்லி;ஊழின்
வந்து அழைப்பதே கடுக்கும் -
முறையாக எதிரே வந்து (வானரர்களாகிய
தம்மை) அழைப்பதையே ஒத்துள்ள;அவ்ஆழி -அந்தத் தென்கடலை;
நோக்கினார் -
(அவர்கள்) கண்டார்கள்.

     கடல் ஆரவாரம் செய்வது - சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று
உரக்கக் கூறுவது போலவும், கடலலைகள் வீசியெறிதல் - வானரர்களுக்குக்
குறிப்புக் காட்டுவது போலவும், கடலலை கரையில் செல்வது - அந்த
வானரர்களை இங்கே வாருங்களென்று எதிர்சென்று கைகளைத் தூக்கி
யழைப்பது போலவும் இருந்ததென்பது.  தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
இலங்கையாள்: பெண்பால் குறிப்புமுற்று.  உழைக் கண்ணி: உவமைத் தொகை
(உழை போன்ற கண்ணி) அலைகளை நீர் நிலைகளின் கைகளாக உவமிப்பது
கவிமரபு.  மான் கண்களை மகளிர் கண்களுக்கு உவமிப்பது அவை கருமையும்
பெருமையும் மருண்ட தன்மையும் கொண்டுள்ளமையால்என்பது.          1

ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல்

4649.'விரிந்து, நீர், எண்
      திசை மேவி, நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து'
     என்று போக்கிய
அருந் துணைக் கவிகள்
      ஆம் அளவு இல்சேனையும்
பெருந் திரைக் கடல்
      எனப் பெரிது கூடிற்றே.  *

     நீர் -நீங்கள்;விரிந்து -பரவி;எண்திசை மேவி -எட்டுத் திக்கு
களுக்கும் சென்று;நாடினீர் -(சீதையைத்) தேடியவர்களாய்;மயேந் திரத்துப்
பொருந்துதிர் -
மகேந்திர மலையில் (எங்களோடு) வந்து கூடுங்கள்;என்று -
என்று கூறி;போக்கிய -(அங்கதன் முதலோர்) முன்பு அனுப்பிய;
அருந்துணை -
அரிய துணையாக வந்த;கவிகள் ஆம் அளவு இல்
சேனையும் -
எண்ணிக்கையற்ற வானர சேனையும்;பெருந்திரைக் கடல்
என -
பெரிய அலைகளையுடைய மற்றொரு கட லைப் போல;பெரிதும்
கூடிற்று -
(அங்கதன் முதலான வானர வீரரிடம்) பெருங் கூட்டமாக வந்து
சேர்ந்தது.

     அனுமன் முதலிய வானரத் தலைவருடன் சுக்கிரீவனால்
அனுப்பப்பட்டவர் இரண்டு வெள்ளம் கொண்டு பெருஞ்சேனையர் என்பது.  2