பக்கம் எண் :

684கிட்கிந்தா காண்டம்

சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி தெரிவித்தல்

4705. என்றலும், இராமன் தன்னை
      ஏத்தினர் இறைஞ்சி, 'எந்தாய்!
''புன் தொழில் அரக்கன் மற்று
      அத்தேவியைக் கொண்டு போந்தான்,
தென் திசை'' என்ன உன்னித்
      தேடி நாம் வருதும்' என்றார்;
'நன்று நீர் வருந்தல் வேண்டா;
     நான் அது நவில்வென்' என்றான்.

     என்றலும் -  என்ற சம்பாதி வினாவியவுடனே (அவ் வானரர்);
இராமன்தன்னை ஏத்தினர் இறைஞ்சி -
இராமபிரானைத் துதித்து வணங்கி
(சம்பாதியை நோக்கி);எந்தாய் -எம் தந்தை போன்றவனே!புன்தொழில்
அரக்கன் -
இழிதொழிலைச் செய்யும் அரக்கனாகிய இராவணன்;அத்
தேவியை -
அந்த இராமபிரான் தேவியான சீதையை;தென் திசை -
தென்திசை வழியாக;கொண்டு போந்தான் என்ன -கொண்டு சென்றான்
என்று;உன்னி -நினைத்து;நாம் தேடி வருதும் என்றார் -நாங்கள்
அச்சீதையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று கூறினர்;நன்று -(அது
கேட்ட சம்பாதி) நல்லது;நீர் வருந்தல் வேண்டா -நீங்கள் வருந்தாதீர்கள்;
நான் அது நவில்வென் -
நான் இதுபற்றி அறிந்துள்ளதைக் கூறுவேன்;
என்றான் -
என்று கூறத் தொடங்கினான்.

     பிறர் மனைவியைக் கவரும் தீக்குண முடையவனாதலால் இராவணனைப்
'புன் தொழிலரக்கன்' என்றார்.

     மற்று: அசை.                                            58

4706.'பாகு ஒன்று குதலையாளைப்
      பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்;
      புக்கனன் இலங்கை; புக்கு,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்
      சிறையகத்து வைத்தான்;
ஏகுமின் காண்டிர்; ஆங்கே
      இருந்தனள் இறைவி, இன்னும்.

     பாகு ஒன்று குதலையாளை -சர்க்கரைப் பாகு போன்ற மழலைச்
சொற்களையுடைய சீதையை;பாதக அரக்கன் -கொடிய அரக்கனான
இராவணன்;பற்றிப் போகின்றபொழுது -கவர்ந்து செல்லுகின்ற போது;
கண்டேன் -
(நான்) பார்த்தேன்;இலங்கை புக்கனன் -(அவன்)
இலங்கையிற் போய்ச் சேர்ந்தான்;புக்கு -(அங்குச்)