சென்று ;வேகின்ற உள்ளத்தாளை -தவிக்கின்ற மனமுடைய அந்தச் சீதையை;வெஞ்சிறை யகத்து வைத்தான் -கொடிய சிறைக் காவலில் வைத்துவிட்டான்;இறைவி -தலைவியான சீதை;இன்னும் ஆங்கே இருந்தனள் -இப்பொழுதும் அங்கேதான் இருக்கின்றாள்;ஏகுமின் காண்டிர்-(நீங்கள்) அங்கே சென்று காணுங்கள். ஏகுமின் - முற்றெச்சம். 59 4707. | 'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி கடல் இலங்கை; அவ் ஊர், பாச வெங்கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்; நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள் ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது?' என்றான். |
ஒலி கடல் இலங்கை -ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அந்த இலங்கையானது;ஓசனை ஒரு நூறு உண்டு -(இங்கிருந்து) நூறு யோசனை தூரத்திலுள்ளது;அவ்ஊர் -அந்த இலங்கையிடத்து;வெம் பாசக் கரத்துக் கூற்றும் -கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும்;கட் புலன் பரப்ப அஞ்சும் -(தனது) கண்ணால் ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுவான்;நீசன் அவ் அரக்கன் சீற்றம் -இழி செயல் செய்யும் அந்த இராவணனது கோபமோ;நெருப்புக்கும் நெருப்பு -நெருப்பையும் அழிக்க வல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது;ஏசு அறுங் குணத்தீர் -பழிப்பற்ற நண்பண்புடையவர்களே!நீங்கள் -;சேறல் -(அங்கே) செல்லுவது;எப்பரிசு இயைவது -எவ்வாறு முடியுமோ?என்றான் -என்று (சம்பாதி) கூறினான். ஆல்: ஈற்றசை. இலங்கையின் நிலையைப் பார்த்தால் எவ்வாறு அங்கே சென்று சீதையைக் காண்பது என்று திகைக்கிறான் சம்பாதி. பாசம்: கயிற்று வடிவுடைய படைக்கருவி; யமனுக்கு உரியது. 60 4708. | 'நான்முகத்து ஒருவன், மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல், பால்முகப் பரவைப் பள்ளிப் பரம்பரன், பணி என்றாலும், காலனுக்கேயும், சேறல் அரிது; இது காவல் தன்மை; மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின்; - விளிவு இல் நாளீர்! |
|