பக்கம் எண் :

மயேந்திரப் படலம் 685

சென்று ;வேகின்ற உள்ளத்தாளை -தவிக்கின்ற மனமுடைய அந்தச்
சீதையை;வெஞ்சிறை யகத்து வைத்தான் -கொடிய சிறைக் காவலில்
வைத்துவிட்டான்;இறைவி -தலைவியான சீதை;இன்னும் ஆங்கே
இருந்தனள் -
இப்பொழுதும் அங்கேதான் இருக்கின்றாள்;ஏகுமின்
காண்டிர்-
(நீங்கள்) அங்கே சென்று காணுங்கள்.

     ஏகுமின் - முற்றெச்சம்.                                      59

4707.'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி
      கடல் இலங்கை; அவ் ஊர்,
பாச வெங்கரத்துக் கூற்றும்
      கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம்
     நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப்
      பரிசு இயைவது?' என்றான்.

     ஒலி கடல் இலங்கை -ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அந்த
இலங்கையானது;ஓசனை ஒரு நூறு உண்டு -(இங்கிருந்து) நூறு யோசனை
தூரத்திலுள்ளது;அவ்ஊர் -அந்த இலங்கையிடத்து;வெம் பாசக் கரத்துக்
கூற்றும் -
கொடிய பாசக்கயிற்றைக் கையில் கொண்டுள்ள யமனும்;கட்
புலன் பரப்ப அஞ்சும் -
(தனது) கண்ணால் ஏறிட்டுப் பார்க்கவும்
அஞ்சுவான்;நீசன் அவ் அரக்கன் சீற்றம் -இழி செயல் செய்யும் அந்த
இராவணனது கோபமோ;நெருப்புக்கும் நெருப்பு -நெருப்பையும் அழிக்க
வல்ல ஒரு பெருந்தீயைப் போன்றது;ஏசு அறுங் குணத்தீர் -பழிப்பற்ற
நண்பண்புடையவர்களே!நீங்கள் -;சேறல் -(அங்கே) செல்லுவது;எப்பரிசு
இயைவது -
எவ்வாறு முடியுமோ?என்றான் -என்று (சம்பாதி) கூறினான்.

     ஆல்: ஈற்றசை.

     இலங்கையின் நிலையைப் பார்த்தால் எவ்வாறு அங்கே சென்று
சீதையைக் காண்பது என்று திகைக்கிறான் சம்பாதி.

     பாசம்: கயிற்று வடிவுடைய படைக்கருவி; யமனுக்கு உரியது.       60

4708.'நான்முகத்து ஒருவன், மற்றை நாரி
      ஓர் பாகத்து அண்ணல்,
பால்முகப் பரவைப் பள்ளிப்
      பரம்பரன், பணி என்றாலும்,
காலனுக்கேயும், சேறல் அரிது;
      இது காவல் தன்மை;
மேல் உமக்கு உறுவது எண்ணிச்
      செல்லுமின்; - விளிவு இல் நாளீர்!