பக்கம் எண் :

686கிட்கிந்தா காண்டம்

     நான்முகத்து ஒருவன் -(நான்கு திசைகளையும் நோக்க) நான்கு
முகங்களைக் கொண்ட பிரமதேவன்;மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் -
மற்றொரு மூர்த்தியான பார்வதியை இடப்பாகத்திற் கொண்ட சிவன்;பால்முகப்
பரவை -
பாலைத் தன்னிடங் கொண்டுள்ள திருப்பாற் கடலில்;பள்ளிப்
பரம்பரன் பணி என்றாலும் -
பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டுள்ள
சிறந்த திருமால் ஆகியோரின் பொருட்டுச் செய்யும் வேலையை யாயினும்;
காலனுக்கேயும் -
(அவ்வளவு ஏன்) யமனுங் கூட;சேறல் அரிது -(அந்தப்
பணியை நிறைவேற்றிட) உள்ளே புகுந்து செல்லுதல் என்பது முடியாததாகும்;
இது காவல் தன்மை -
(ஏனெனில்) இது (இலங்கையின்) கட்டுக் காவல்
தன்மையாகும்;விளிவு இல் நாளீர் -அழிவில்லாத நீண்ட ஆயுட்
காலத்தையுடையவர்களே!மேல் உமக்கு உறுவது -இனிமேல், உங்களுக்கு
நேரக் கூடியவற்றை;எண்ணிச் செல்லுமின் -முன்னரே ஆராய்ந்து பார்த்துச்
செல்லுங்கள்.

     மும்மூர்த்திகளின் பொருட்டுச் செய்யும் பணியாக இருப்பினும் அதனைச்
செய்து முடிப்பதற்காக இலங்கைக்குள் புகுவது இயமனுக்குக் கூட முடியாது.
ஆகவே, இது பற்றி முன்னரே ஆராய்ந்து முடிவெடுத்துத் தக்கவாறு
செய்யுங்கள் என்றான் சம்பாதி.                                    61

4709.'எல்லீரும் சேறல் என்பது எளிது
     அன்று, அவ்இலங்கை மூதூர்;
வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து
      அவண் ஒழுகி, வாய்மை
சொல்லீரே துயரை நீக்கித்
      தோகையைத் தெருட்டி, மீள்திர்;
அல்லீரேன், என் சொல் தேறி,
      உணர்த்துமின் அழகற்கு அம்மா!

     அவ் இலங்கை மூதூர் -பழமையான அந்த இலங்கைக்கு;எல்லீரும் -
நீங்கள் எல்லோரும்;சேறல் என்பது -(ஒருமிக்கப்) போய்ச் சேர்வது
என்பது;எளிது அன்று -எளிய செயலில்லை;வல்லீரேல்- (ஆனால்)
திறமைமிக்கவராக இருந்தால்;ஒருவர் ஏகி -(உங்களுக்குள்) வல்லமையுடைய
ஒருவர் மட்டும் (தனித்துச்) சென்று;அவண் மறைந்து ஒழுகி -
(அங்குள்ளவர்கள் அறியமுடியாதபடி) அங்கே மறைந்து (சீதையைத் தேடும்)
செயல்புரிந்து;வாய்மை சொல்லீரே -இராமன் கூறிய உண்மை மொழிகளைச்
சொல்லியவர்களாய்;தோகையைத் தெருட்டித் துயரை நீக்கி -சீதைக்குத்
தெளிவூட்டித் துன்பத்தைப் போக்கி;மீள்திர் -திரும்புங்கள்;அல்லீரேல் -
இல்லாவிட்டால் (உங்களில் ஒருவர் போகவில்லையென்றால்);என் சொல்
தேறி -
நான் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து;அழகற்கு
உணர்த்துமின் -
அழகுள்ள அந்த இராமபிரானிடம் (சீதை இலங்கையில்
இருப்பதைத்) தெரிவியுங்கள்.