தாக்கியதால்;இளைத்து -(நான்) வலிமை குன்றி;தாள் உலைவுற்றேன் - என் கால்கள் வலியெடுத்து வருந்தினேன்; திரிவிக்கிரம அவதார காலத்தில் உலகமுழுவதும் நிறைந்த திருமாலின் திருவடியை வணங்கிக் கொண்டே பலமுறை பூமியை வலம் வருகையில் மேருமலை எனது காலிற்பட்டுக் கால் சிறிது ஊனமானதால் இப்போது கடல்கடக்கும் வலிமையில்லாதவன் ஆயினேன் என்று சாம்பவான் கூறினான் என்பது. மொய்ம்பு: தோள். எட்டு மாதிரங்கள்: கிழக்கு முதலான பெருந்திசைகள் நான்கு; தென்கிழக்கு முதலிய கோணத் திசைகள் நான்கு. ஐந்து, ஆறு ஆகிய ஒரு செய்யுட்களும் ஒரு தொடராய் இயைந்து பொருள் முடிவு கொண்டதால் ஆறாவது செய்யுளின் ஈற்றிலுள்ள 'நாலு முகத்தான் உதவுற்றான்' என்ற தொடர் இங்கு எழுவாயாகக் கொள்ளப்படுதற்குரியது. 5 4716. | 'ஆதலின், இப் பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும், சீதைதனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று' என்று ஓதி இறுத்தான் - நாலுமுகத்தான் உதவுற்றான். |
ஆதலின் -ஆதலால்;இப்பேர் ஆர்கலி -இந்தப் பெரிய கடலை; குப்புற்று -தாவித் தாண்டி;அகழ் இஞ்சி மீது - அகழியைச் சார்ந்த (இலங்கையில்) மதில்கள் மேல்;கடந்து -கடந்து சென்று;தீயவர் உட்கும் வினையோடும் -கொடியவர்களான அந்த அரக்கர்கள் அஞ்சிநடுங்கும் வீரச் செயலுடனே;சீதைதனைத் தேர்ந்து -சீதையைத் தேடிக் கண்டுபிடித்து; இங்கு உடன் மீளும் -இங்கே உடனே திரும்பி வரக்கூடிய;திறன் இன்று என்று -வலிமை எனக்கு இல்லையென்று;ஓதி இறுத்தான் - சொல்லிமுடித்தான்;நாலு முகத்தான் உதவுற்றான் -நான்கு முகங்களையுடைய பிரமதேவன் அருளிய சாம்பவான். ஆர்கலி: நிறைந்த ஓசையையுடைய கடல் - காரணப் பெயர்: வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. குப்புதல்: குதித்தல்; தாண்டிக் கடத்தல். அகழ்: அகழப்படுவது - முதனிலைத் தொழிற் பெயர். இஞ்சி : மதில். 6 அனுமனே தக்கவன் எனச் சாம்பவன் உரைத்தல் 4717. | 'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு, ''இனி யாரைப் |
|