பக்கம் எண் :

மயேந்திரப் படலம் 703

அறுசீர் ஆசிரிய விருத்தம்

4731.''' இலங்கையை இடந்து வேரோடு இவ்
      வயின் தருக'' என்றாலும்,
''விலங்கினர் தம்மை எல்லாம்
      வேரொடும் விளிய நூறி,
பொலங் குழை மயிலைக் கொண்டு
      போது'' எனப் புகன்றிட்டாலும்,
கலங்கலீர்! உரைத்த மாற்றம்
      முடிக்குவல் கடிது; காண்டிர்!   *

     இலங்கையை -(அனுமன் சாம்பவானைப் பார்த்து) இலங்கை நகரை;
வேரோடு இடந்து -
வேரோடு பெயர்த்தெடுத்து;இவ்வயின் தருக
என்றாலும் -
இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று (நீங்கள்)
கூறினாலும்;விலங்கினர்தம்மை எல்லாம் -எதிர்த்துத்
தடுப்போரையெல்லாம்;வேரொடும் விளிய நூறி -அடியோடு அழியுமாறு
பொடிப் பொடியாக்கி;பொலங் குழை மயிலை -பொன்னாற் செய்த
குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை;கொண்டு போது
என -
எடுத்துக் கொண்டுவா என்று;புகன்றிட்டாலும் -சொன்னாலும்;
உரைத்த மாற்றம் முடிக்குவல் -
(நீங்கள்) கூறிய சொற்படியே செய்து
முடிப்பேன்;கடிது காண்டிர் -(அதை) விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்;
கலங்கலீர் -
(ஆகவே) கலங்காதீர்கள்.

     கடலைக் கடந்து சீதையைக் கண்டு வருதல் எவ்வாறு முடியுமென்ற
சிந்தை உங்களுக்குச் சிறிதும் வேண்டா என்ற கருத்துப்படக் 'கலங்கலீர்'
என்றார்.  முடிக்குவல்: தன்மையொருமை எதிர்கால வினைமுற்று.        21

4732.'ஓசனை ஒன்று நூறும் உள்
      அடி உள்ளது ஆக,
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப,
      இருங்கடல் இனிது தாவி,
வாசவன் முதலோர் வந்து
      மலையினும், இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி
      நினைத்தது முடிப்பல்; பின்னும்,

     ஈசன் -திருமால்;மண் அளந்தது ஏய்ப்ப -உலகத்தையளந்தது
போல;ஓசனை ஒன்று நூறும் -(இங்கிருந்து இலங்கைவரை) நூறு யோசனை
தூரப் பரப்பையும்;உள் அடி உள்ளது ஆக -உள்ளங் காலின் ஓரடி
வைப்புக்குள் அடங்கும்படியாக;இருங்கடல் இனிது தாவி -பெரிய கடலை
மிக எளிதாகத் தாண்டி;வாசவன் முதலோர் -இந்திரன்