| ஏனைவானரர் சிலரும் ஏக, மா முழையில், முழு ஞான நாதரை, அறிவின் நாடி, மாருதி மொழியும்: |
மான் - மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் - தேடுதலாகிய பணியைச் செய்வோர். 2-3 315. | உலகு தங்கிய பல தொல் உயிர்கள் உயர்ந்திடு பரிசில் இலகும் இங்கிதம் உடையர்; இசையின் இன்புறு சுருதி அலகு இல் விஞ்சைகள் உடையர்; அகிலமும் தொழு கழலர்; விலகு திண் கொடு வினைகள் வெகுளிகொண்டு அடு விறலர். |
இங்கிதம் - குறிப்பு; விஞ்சைகள் - வித்தைகள் 8-1 316. | சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன் அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது துவளும் அஞ்சன உருவு தொடரு செங்கமல மலர் உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல் என. |
அம்புய மலர் - தாமரை மலர்; இந்திரை - திருமகள்; கொழுநன் - கணவன். 8-2 317. | 'மற்றும் இவ் உலகத்து உள்ள முனிவர், வானவர்கள், ஆர், இச் சொல் திறம் உடையார்? மற்று எச் சுருதியின் தொகுதி யாவும் முற்று அறிதரும் இம் மாணி மொழிக்கு எதிர், முதல்வர் ஆய பெற்றியர் மூவர்க்கேயும், பேர் ஆற்றல் அரிது மன்னோ.' |
சுருதி - வேதம் (கேட்கப்படுவது); மாணி - பிரமசாரி 19-1 |