318. | இருக்கண் மா மைந்தரான வாலியும், இளவல்தானும், செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின் சீறி வாலி நெருக்குற, வெருவி, இந்த நெடுங் குவட்டு இறுத்தான் தன்பால் - மருக் குலாம் தாரீர்! - வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ? |
இருக்கண் - பிரமன்; நெடுங்குவடு - பெரிய மலை. 21-1 3. நட்புக் கோட் படலம் 319. | 'பிரிவு இல் கான் அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன் கரிய மா நகிலொடும், காதொடும், நாசியை அரியினார்; அவள் சொல, திரிசிராஅவனொடும், கரனொடும், அவுணரும், காலன் வாய் ஆயினார். |
அரியினார் - அறுத்தனர 10-1 320. | கடுத்து எழு தமத்தைச் சீறும் கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து வடித்த நூல் முழுதும் தான் ஓர்வைகலின், வரம்பு தோன்றப் படித்தவன் வணங்கி, வாழ்த்தி, பருமணிக் கனகத் தோள் மேல் எடுத்தனன், இரண்டுபாலும் இருவரை; ஏகலுற்றான். |
நமம் - இருள். 29-1 321. | 'இவன், உலைந்து உலைந்து, எழு கடல் புறத்து அவனியும் கடந்து, எயில் அடைந்தனன்; கவனம் ஒன்று இலான், கால் கடாயென, |
|