| அவனி வேலை ஏழ், அரியின் வாவினான். |
உலைந்து - தோற்று; எயில் - மதில் (இங்கே புற அண்டத்து எல்லையிலுள்ள மதில்); கவனம் - கலக்கம்; கால் - காற்று; வாவினான் - தாவினான். 64-1 322. | 'என்று கால்மகன் இயம்ப, ஈசனும், ''நன்று நன்று'' எனா, நனி தொடர்ந்து பின் சென்ற வாலிமுன் சென்ற செம்மல்தான் அன்று வாவுதற்கு அறிந்தனன்கொலாம்?' |
கால்மகன் - வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் - (இங்கே) இராமபிரான். 64-2 323. | இனையவா வியந்து இளவல் தன்னொடும், வனையும் வார் கழல் கருணை வள்ளல், பின்பு, 'இனைய வீரர் செய்தமை இயம்பு' என, புனையும் வாகையான் புகறல் மேயினான்: |
இனையவா(று) - இவ்வாறு 64-3 324. | 'நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள், செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச் சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப் பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான். |
நக்கரம் - முதலை. 64-4 325. | 'திறத்து மா மறை அயனொடு ஐம்முகன், பிறர், தேடிப் புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடிக் கமலம் |
|