பக்கம் எண் :

714கிட்கிந்தா காண்டம்

 உறச் சிவப்ப இத் தரைமிசை
      உறல், அறம் ஆக்கல்,
மறத்தை வீட்டுதல், அன்றியே,
      பிறிது மற்று உண்டோ?'

     ஐம்முகன் - சிவபிரான்.                                70-1

326.'நீலகண்டனும், நேமியும்,
      குலிசனும், மலரின்-
மேல் உளானும், வந்து, அவன்
      உயிர்க்கு உதவினும், வீட்டி
ஆலும் உன் அரசு
      உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
சாலும், இன்று எனது உரைக்கு
      அருஞ்சான்று' எனச் சமைந்தான்.

     நீலகண்டன் - சிவபிரான்; நேமி - திருமால்; குலிசன் - (வச்சிரப்
படையான்)இந்திரன்.                                       71-1

327.'மண்ணுள் ஓர் அரா முதுகிடை
      முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள; அவற்றில்
      ஒன்று உருவ எய்திடுவோன்,
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர்
      விடுக்கும்' என்ற உலகின்-
மண் உளோர்கள்தாம் கழறிடும்
      கட்டுரை உளதால்.

     அரா - பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால்
துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது
செய்யுள்).

5. துந்துபிப் படலம்

328.புயலும் வானகமும், அப்
      புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
      அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
      மறத்து உடலினார்.