| இயலும் மா மதியம் ஈர் ஆறும் வந்து எய்தவே.' |
புயல் - மேகம்; புணரி - கடல். 9-1 7. வாலி வதைப் படலம் 329. | பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார் நோவுற உலந்தனர்; அதனை நோக்கி, யான் ஆர்கலிதனைக் கடைந்து, அமுது கொண்டனென்; போர் வலி அழிந்து போய், புறம் தந்து ஓடலேன். |
பேர்வுற - அசைந்திட; வலிக்க - இழுக்க; மிடுக்கு - வலிமை; ஆர்கலி - கடல். 27-1 330. | ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங் கதிர்ப் புதல்வன் மீண்டும் ஏற்றிய சிலை இராமன் இணை அடி இறைஞ்சி வீழ்ந்து, 'தோற்றுமுன், ஆவி கொண்டு, இத்தொல் உறை இருந்தேன்; உந்தன் மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்; உடல்வலி மாய்ந்தது' என்றான். |
வாலிக்கு ஆற்றலன் ஆகி - வாலியின் வலிமைக்கு எதிரே தாங்கமுடியாதவனாகி; கதிர்ப்புதல்வன் - கதிரவன் மகன் (சுக்கிரீவன்).61-1 331. | என்றலும், இராமன், 'நீங்கள் இருவரும் எதிர்ந்த போரில், ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு அரியது ஆகி, கொன்றிடு பாணம் ஏவக் குறித்தலேன்; குறியால் செய்த மன்றலர் மாலை சூட்டி ஏவுதும், மறித்தும்' என்றான். |
61-2 |