332. | இராமன் அஃது உரைப்பக் கேட்டே, இரவி சேய் ஏழது ஆகும் தராதலத்து அதிர ஆர்த்து, தம் முனோன் முன்னர்ச் செல்ல, பராபரம் ஆய மேருப் பருப்பதம் தோற்றிற்று என்ன கராதலம் மடித்து வாலி கனல்- துகள் சிவந்து காட்ட. |
பருப்பதம் - மலை (பர்வதம்); கராதலம் - கை. 61-3 333. | சிவந்த கண்ணுடை வாலியும், செங்கதிர்ச் சேயும், வெவந்தபோது, அவர் இருவரும் நோக்கின்ற வேலை, கவந்த தம்பியைக் கையினால் எடுத்து, அவன் உயிரை அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன். |
வெவந்தபோது - பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் - இயமன். 62-1 334. | வெற்றி வீரனது அடு கணை, அவன் மிடல் உரத்தூடு உற்றது; அப்புறத்து உறாதமுன், உறு வலிக் கரத்தால் பற்றி, வாலினும் காலினும் பிணித்து, அகப்படுத்தான்; கொற்ற வெங் கொடு மறலியும், சிரதலம் குலைந்தான். |
மிடல் உரம் - வலிமையான மார்பு; உறு வலி - மிகுந்த வலிமை. 66-1 335. | ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை; உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை; வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை; வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்; |
|