| தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத் தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான், நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்; நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே! |
செற்றம் - பகைமை; தாதை - தந்தை. 89-1 336. | மா வலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம் ஓவல் அற்று உதவல், நின் ஒரு தனி்ப் பெயர் இயம்பு ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப் பொருளை ஆம் தேவ! நிற் கண்ட எற்கு அரிது எனோ, தேரினே? |
ஆவலிப்பு -பெருமிதம். 128-1 337. | இடைக்கலம் அல்லன்; ஏவியது ஓர் பணி கிடைத்த போது, அது செய்யும் இக் கேண்மையன்; படைக்கலக் கைப்பழம் பேர் அருளே! நினது அடைக்கலம் - அடியேன் பெற்ற ஐயனே. |
இடைக்கலம் -இடையே வந்தவன். 158-1 8. அரசியற் படலம் 338. | வள்ளலும், அவண் நின்று ஏகி, மதங்கனது இருக்கை ஆன வெள்ள வான் குடுமிக் குன்றத்து ஒருசிறை மேவி, மெய்ம்மை அள்ளுறு காதல் தம்பி, அன்பினால் அமைக்கப்பட்ட எள்ளல் இல் சாலை எய்தி, இனிதினின் இருந்த காலை, |
வெள்ள வான் குடுமி -நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்; ஒரு சிறை -ஒருபக்கம் |