10. கிட்கிந்தைப் படலம் 339. | சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண் நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும், வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான். |
வென்றி வீரன் -வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல் வினை -இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை - அவனை (அங்கதனை). 25-1 340. | நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து, ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம் மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே. |
ஆழிநாதன் -சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே இராமபிரான்);மீளி -வலிமையுடையவன். 32-1 341. | மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு ஓவு இலா மனத்து உன்னினன் -எங்கள்பால் பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத் தேவரானும் சினத்தொடு நோக்கியே. |
சேமித்த மென்மை -அடைந்து வைத்த சிறுமை;தேவரான் - தேவனாகிய இலக்குவன். 34-1 342. | அன்னை போன பின், அங்கதக் காளையை, தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன், 'இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு' என, மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான். |
அன்னை -தாயாகிய தாரை;மாசு இலான் -குற்றம் இல்லாத அங்கதன். 77-1 343. | சேய்உயர் கீர்த்தியான், 'கதிரின் செம்மல்பால் போயதும் அவ் வயின் புகுந்த யாவையும், 'ஓய்வுறாது உணர்த்து' என, உணர்த்தினான் அரோ, வாய்மையா - உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன். |
|