பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்719

     சேய் உயர் கீர்த்தியான் -நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
                                                         137-1

11.  தானை காண் படலம்

344. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.

     எண்கின் வீரர் -கரடி வீரர்கள்.                          1-1

345. இன்னது ஆகிய திறத்து அவர்
      இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில்
     தூதம் தம் திறத்தால்,
பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம்
      கவிப் படை பயில, -
பொன்னின் வார் கழல் இடபன் -
      அக் கிட்கிந்தை புகுந்தான்.

     அவர் இருக்க -இராம இலக்குவர்கள் காத்திருக்க;ஆறு இரு
வெள்ளம் -
பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை -குரங்குப் படை. 1-2

346.'தாமரை பெருந் தவிசு
      உறை சதுமுகக் கடவுள்
ஓம அடஙகியில் உதித்தன,
      உலப்பு இல கோடி
ஆம்' எனப் புகல் வானரத்
      தானை அங்கு அணித்தா, -
மா வயப் புயத்து எறுழ் வலி
      மயிந்தன் - வந்து அடைந்தான்.

     தவிசு -இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் -நான்கு முகங்
கொண்ட பிரமதேவன்;ஓம அங்கி -வேள்வித் தீ;தனை -சேனை. 1-3

347.கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய
      முன் வாலி
பொங்கும் ஆணையின் எண்திசைப்
      பொருப்பினும் பொலியத்