பக்கம் எண் :

720கிட்கிந்தா காண்டம்

 தங்கி வாழ் கவித் தானை
     அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட, -
      வசந்தன் - வந்து அடைந்தான்.

     கங்கை சூடி -சிவபெருமான்; வங்க வேலை -கப்பல்கள் இயங்கும்
கடல்.                                                       1-4

348. வட்ட விண்ணையும் மண்ணையும்
      எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு
      பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன,
     ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம்
      படையொடு தூமிரன் வந்தான்.

     நெட்டு அரா -நீண்ட பாம்பு (ஆதிசேடன்).                19-1

349. ஓங்கு மேருவை வேருடன்
     பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி
      மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது
      ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும்
      அக் கணத்து உற்றான்.

     பரவை -கடல்;படி - உலகம்.                          19-2

350. வீரை ஏழையும் கலக்குறு
      மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட
      வேண்டினும் பறிப்பர்,
ஈர் - ஐஞ்ஞூற்று எழு கோடி
      வானரப் படை ஈண்ட,
தாரையைத் தந்த ததிமுகன்
      நொடியினில் சார்ந்தான்.

     வீரை  -கடல்;தாரையைத் தந்த ததிமுகன் -தாரையின்
தந்தையாகியததிமுகன்                                      19-3