12. நாட விட்ட படலம் 351. | சாரும் வீரர் சதவலி தம்மொடும் கூரும் வீரர்கள் யாவரும் கூடியே, நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப் பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால். |
சதவலி சாரும் வீரர் தம்மொடும் -சதவலி என்ற தலைவனைச் சார்ந்துள்ள வீரர்களோடும்;கூரும் -(வலிமையால்) மிகும். 9-1 352. | குட திசைப் படு பூமி, குபேரன் வாழ் வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று, இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால். |
ஓர் மதி தொடர -ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட 10-1 353. | குடதிசைக் கண் இடபன் குணதிசைக் கடலின் மிக்க பனசன் சதவலி வடதிசைக்கண் அன்று ஏவினன் - மான மாப் படையின் வெள்ளத்துடன் செலப் பான்மையால். |
மான மாப் படை -தன்னிலையில் தாழாத பெரும்படை 10-2 354. | என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும் நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார் அன்று மாருதிஆம் முதல் வீரர்க்குத் துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்: |
கதிரோன் மகன் -சுக்கிரீவன் 10-3 13. பிலம் புக்கு நீங்கு படலம் 355. | 'இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?' என அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது; தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது; |
|