அயிர்க்கலாவது -ஐயப்படுதற்கு உரியது;அயிர்த்தல் -சந்தேகித்தல். 12-1 356. | வச்சிரமுடைக் குரிசில் வாள் அமரின் மேல் நாள், மெச்சு அவுணர் யாவரும் விளிந்தனர்களாக, அச்சம் உறு தானவர்கள் கம்மியனும் அஞ்சி, வைச்ச பிலமூடிதன் மறைந்து அயல் இருந்தான். |
வச்சிரமுடைக் குரிசில் -இந்திரன்;தானவர் தச்சன் -அசுரத் தச்சனானமயன். 57-1 357. | மாதுஅவள் உயிர்த்த மகவோர் இருவர்; வாசப் போது உறை நறைக் குழல் ஒருத்தி; - புகழ் மேலோய்! - ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்; சீதள முலைச் சிறுமி தாதையொடு சென்றாள். |
மாது -சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது;போது -விரியும் பக்குவத்திலுள்ள பூ;நறைக் குழல் -மணமுள்ள கூந்தல். 61-1 358. | மத்த நெடு மா களிறு வைத்த குலிசி வன் தாள் சித்தமொடு மான்முகன் வணங்கி, அயல் சென்றான்; வித்தகனும், ஆயிர விலோசனனும், மேன்மேல், முத்த நகையாளை நனி நோக்கினன், முனிந்தான். |
களிறு -யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்);குலிசி - வச்சிராயுதமுடைய இந்திரன்;ஆயிர விலோசனன் -இந்திரன். 61-2 359. | மேருசவ் வருணி எனும் மென்சொலினள், விஞ்சும் |
|