| ஏர் உறு மடந்தை, யுகம் எண்ண அரு தவத்தாள், சீர் உறு சுயம்பிரபை, ஏமை செறிவு எய்தும் தாருவளர் பொற்றலமிசைக் கடிது சார்ந்தாள். |
ஏர் -அழகு. 71-1 360. | மேரு வரை மா முலையள், மென்சொலினள், - விஞ்சு மாருதியினைப் பல உவந்து, மகிழ்வுற்றே, - ஏர் உறு சுயம்பிரபை, ஏமை நெறி எய்த, தாரு வளர் பொன் - தலனிடைக் கடிது சார்ந்தாள். |
'மேரு சவ்வருணி' என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும் ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள். சொற்களிலே சில மாற்றம். 72-2 14. ஆறு செல் படலம் 361. | இருவரும் கதம் எய்தி அங்கையில் செரு மலைந்திடும் பொழுது, திண் திறல் நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர் பரு மராமரம் பறித்து வீசினான். |
இருவரும் -அங்கதனும் அசுரனும்;நிருதன் -அசுரன்;கதுவ - சேர்ந்திட 7-1 362. | வீசு மா மரம் சிந்த, வென்றி சேர் ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து, ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்; கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான். |
ஆசு இல் -குற்றம் இல்லாத 7-2 363. | குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன் நின்ற அங்கதன், நெடு மராமரம் ஒன்று வாங்கி மற்றவன் ஒடிந்திடச் சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே. |
|