364. | ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும் ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம் சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி, சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார். |
ஓகை -உவகை;சேகு -திண்மை (இங்கே வலிய நிலம்) 45-1 365. | இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்; அனைய நாட்டின் அருந் தவர் யாவரும் நனி விரும்பி நயந்தனர், நான்மறைப் புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார். |
புந்தியார் -அறிவுடையார் 45-2 366. | 'செல்வர்' என்றும், 'வடகலை, தென் தமிழ்ச் சொல், வரம்பினர்' என்றும், 'சுமடரைக் கொல்வர்' என்றும், 'கொடுப்பவர்' என்றும், - அவ் இல் வரம்பினர்க்கு ஈ தேனும் ஈட்டதே. |
சுமடர் -கீழ்மக்கள் 45-3 15. சம்பாதிப் படலம் 367. | யாவரும் அவ் வயின்நின்றும், 'மன் இயல் பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத் தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்; மேவினம்' என்பது விளம்பினார்அரோ. |
பூவரும் -தாமரை மலரின் வைகும்;அருந்ததி பொருவும் - அருந்ததியைப் போன்ற 3-1 368. | அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ, தென் மலைநாட்டினைத் தேடிச் சென்று, உடன் இன் இசைத் தலைவரோடு இரண்டு வெள்ளமும் |
|